tamilnadu

img

முன்னாள் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை!


சூதாட்டத்தில் ஈடுபட்ட தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான குலாம் போடிக்கு, 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் முன்னால் வீரரான குலாம் போடி, இந்திய வம்சாவழியை சேர்ந்தவர். இவர் தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணியில்  2 ஒருநாள் மற்றும் ஒரே ஒரு 20 ஓவர் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். கடந்த 2015-ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடந்த உள்ளூர் போட்டியின் போது அவர் சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் சிக்கினார். இதை அடுத்து, தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் குலாம் போடிக்கு 20 வருடம் விளையாட தடை விதித்து.

இதை தொடர்ந்து, பிரிட்டோரியாவில் உள்ள குற்றவியல் நீதிமன்றத்தில் குலாம் போடி மீது சூதாட்ட வழக்கு  தொடரப்பட்டது. இதில் அவர் மீது 8 விதமான ஊழல் புகார் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் குலாம்போடிக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்துள்ளார்.