tamilnadu

img

இந்திய கிரிக்கெட் மகளிர் அணியில் சூதாட்ட சர்ச்சை - பிசிசிஐ

தமிழ்நாடு ப்ரீமியர் லீக் போட்டில் சூதாட்ட புகாரை தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் மகளிர் அணியிடம் சூதாட்ட தரகர்கள் அணுகியதாக புகார் வந்துள்ளது.

இந்திய கிரிக்கெட் மகளிர் அணி கடந்த பிப்ரவரி மாதம் இங்கிலாந்து அணியுடன் மோதியது. இந்நிலையில் இத்தொடரின் போது சூதாட்ட தரகர்கள் அணுகியதாக குறிப்பிட்ட வீராங்கனை பிசிசிஐ ஊழல் தடுப்பு பிரிவிடம் புகார் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து ராகேஸ் பாஃப்னா, ஜிதேந்திரா கோத்தாரி ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்திய வீராங்கனைகளிடம் சூதாட்டம் தொடர்பாக அணுகியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
 

;