இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி வீரர் சனத் ஜெயசூர்யா கனடாவில் நிகழ்ந்த ஒருவிபத்தில் மரணமடைந்ததாக இணைய த்தளத்தில் போலிச் செய்தி ஒன்று வெளியாகி விளையாட்டு உலகை பரபரப்படையைச் செய்துள்ளது. இந்த போலிச் செய்தியைக் கண்ட ஜெயசூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில், “நான் இலங்கையில் உள்ளேன். கனடாவுக்குச் செல்லவில்லை.என்னுடைய உடல்நலன் குறித்த தவறான செய்தி களைப் பொருட்படுத்த வேண்டாம். வதந்தியைப் நம்பவேண்டாம்” என்று பதிவிட்டார். இலங்கை நாட்டில் சமீப காலமாக இணையதளம் மூலம் வதந்தி செய்திகள் அதிகம் பரவி வருகின்றன.இந்த வதந்தியில் திரைத்துறை நட்சத்திரங்கள் பலர் சிக்கியுள்ள நிலையில், தற்போது கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யா சிக்கி உள்ளார்.