tamilnadu

img

விண்டீஸ் சுற்றுப்பயணம் தோனி விலகல்

இந்திய கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி-20 என மூன்று விதமான போட்டிகளைக் கொண்ட தொடரில் பங்கேற்பதற்காக வரும் ஆகஸ்ட் மாதம் மேற்கு இந்தியத் தீவுகளுக்கு (விண்டீஸ்) சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. 

இந்த தொடருக்கான வீரர்கள் விபரம் ஞாயிறன்று அறிவிக்கப்படும் நிலையில், அனுபவ வீரர் தோனி ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட விரும்புவதாகக் கூறி விண்டீஸ் அணிக்கெதிரான தொடரிலிருந்து விலகுவதாகச் சனியன்று அறிவித்தார். 

இது சாதாரண அறிவிப்பு தான் என்றாலும் விடுப்பு எடுப்பது  குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ)  அனுமதி மூலம் தான் முடிவு எடுக்க முடியும். ஆனால் தோனி தனிநபராக 2 மாத விடுப்பு அறிவித்துள்ளதால் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடுப்பில் பிசிசிஐ 

தோனியின் தன்னிச்சையான முடிவால் பிசிசிஐ கடுப்பில் உள்ளது.  இதுகுறித்து பிசிசிஐ தரப்பில் கூறியதாவது, “தோனி ஓய்வுபெறவில்லை.  ராணுவ நடவடிக்கைகள் தொடர்பாக 2 மாதகாலம் விடுப்பு எடுத்துள்ளார். இந்த விவகாரம் குறித்து அடுத்தகட்ட முடிவு எடுக்க கேப்டன் விராட் கோலி மற்றும் தேர்வுக்குழுத் தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் ஆகியோரின் கையில் உள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.