கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய உள்ளூர் டி-20 தொடரான ஐபிஎல் தொடரின் நடப்பாண்டிற்கான சீசன் வரும் மார்ச் மாதம் தொடங்குகிறது. இந்த தொடரில் பங்கேற்கும் நட்சத்திர அணியான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.