tamilnadu

img

போன் பேசியபடி காரை இயக்கிய டேவிட் பெக்காம்

இங்கிலாந்து கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் டேவிட் பெக்காம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 21-ஆம் தேதி கார் ஓட்டிக்கொண்டிருக்கும் போது போன் பேசியதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு ப்ரோம்லி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.புதனன்று நடைபெற்ற இறுதி விசாரணையில் டேவிட் பெக்காம்  குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டது. வியாழனன்று அறிவிக்கப்பட்ட இறுதி தீர்ப்பின்படி டேவிட் பெக்காம் ஆறு மாதம் டிரைவிங் செய்ய ப்ரோம்லி நீதிமன்றம் தடை விதித்துள்ளது.அதாவது அவரது ஓட்டுநர் உரிமம் 6 மாத காலம் நிறுத்திவைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.