tamilnadu

img

நடுவருடன் கடும் வாக்குவாதம் செய்த தோனிக்கு அபராதம்!

ஜெய்ப்பூரில் நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடந்த ஐபிஎல் டி20 போட்டியில் சென்னை அணியின் கேப்டன் தோனி நடுவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஜெய்ப்பூரில், ஐபிஎல் டி20 போட்டியின் 25-வது ஆட்டம் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நேற்று நடந்தது. இதில் 4 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.

போட்டியின் கடைசி ஓவரில் சென்னை அணியின் வெற்றிக்கு 18 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், பென் ஸ்டோக்ஸ் அந்த ஓவரில் பந்து வீசினார். அந்த ஓவரில் ஒரு பந்து இடுப்புக்கு மேல் வீசப்பட்டது. அதை நோ பாலாக முதலில் அறிவிக்கப்பட்டு பின்னர், இல்லை என அறிவிக்கப்பட்டது. இதை வெளியிலிருந்து பார்த்துக்கொண்டிருந்த டோனி, மைதானத்துக்குள் புகுந்து அந்த பந்தை நோ பாலாக அறிவிக்கும்படி நடுவர்களுடன் வாக்குவாதம் செய்தார். ஆனால் அவரது கோரிக்கையை நடுவர்கள் ஏற்க மறுத்துவிட்டனர். 

இதனை அடுத்து, போட்டியின் போது நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதாக கேப்டன் டோனிக்கு, சம்பளத்தில் 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 


;