tamilnadu

img

ஊழல் கண்காணிப்பு ஆணையம் விசாரணை

பாகிஸ்தான் வீரர் உமர் அக்மலுக்கு தற்காலிக தடை

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் அதி ரடி பேட்ஸ்மேனான உமர் அக்மல் தற்போது சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஒதுங்கியுள்ளார். உள்ளூர் தொடர் மற்றும் டி-20 லீக் தொடரில் மட்டும் விளையாடி வரும் உமர் அக்மல் பாகிஸ்தான் சூப்பர் லீக் (பிஎஸ்எல்) தொடரில் குவெட்டா கிளேடியேட்டர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.  பிஎஸ்எல் தொடரின் நடப்பாண்டிற்கான சீசன் தற்போது தொடங்கும் தருணத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திலுள்ள ஊழல் கண்காணிப்பு ஆணையம் உமர் அக்மலிடம் விசாரணை நடத்தியது. என்ன பிரச்சனை எதற்காக விசாரணை என்பதை கூறாமல் மறைமுகமாக விசாரணை நடத்தப்பட்டது.  

ஊழல் தடுப்பு விசாரணை காரணமாக உமர் அக்மலுக்கு தற்காலிக தடை விதிக்கப்படுவதாகப் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. எனினும் உமர் அக்மலின் குற்றத் தன்மையைப் பற்றி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளி யிடவில்லை. பொதுவாக கிரிக்கெட்  வீரர் ஒருவரிடம் ஊழல் தடுப்பு மற்றும் ஊக்கமருந்து தடுப்பு விசாரணையை எதிர்கொண்டால் அந்த விசாரணை நிறைவு பெறும் வரை கிரிக்கெட் தொடர்பான எந்த நடவடிக்கை யிலும் பங்கேற்க முடியாது. இதே நிலை தான் உமர் அக்மலுக்கு ஏற்பட்டுள்ளது.