tamilnadu

img

விசாக் டெஸ்ட் மயாங்க் அகர்வால் இரட்டை சதமடித்து அசத்தல்

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.  3 போட்டிகளைக் கொண்ட இந்த டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம் ஆந்திர மாநிலத்தின் கடற்கரை நகரமான விசாகப்பட்டினத்தில் புதனன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து முதலில் களமிறங்கியது. தொடக்க வீரர்களாகக் களமிறங்கிய ரோஹித் சர்மா - மயாங்க் அகர்வால் ஜோடி  தொடக்கத்திலேயே ஆதிக்கம் செலுத்தி தென் ஆப்பிரிக்க அணியின் பந்துவீச்சை பந்தாடியது. அரைசதமடித்து அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திக்கொண்டிருந்த ரோஹித் - அகர்வால் ஜோடியைக் கழற்ற தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர்கள் பல்வேறு வகையில் முயற்சி செய்தும் பலனில்லை. அரைசதமடித்த அடுத்த சில நிமிடங்களில் அதிரடியைக் கையிலெடுத்த ரோஹித் சர்மா சதமடித்து அசத்தினார்.  திடீரென மழை களமிறங்கியதால் தேநீர் இடைவேளைக்கு முன்னதாகவே முதல் நாள்  ஆட்டம் முடிவுக்கு வந்தது. இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 59.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 202 ரன்கள் எடுத்தது. ரோஹித் சர்மா 115, மயாங்க் அகர்வால் 84 ரன்களுடன் களத்திலிருந்தார்கள். வியாழனன்று தொடங்கிய 2-வது நாள் ஆட்டத்திலும் ரோஹித் சர்மா - மயாங்க் அகர்வால் ஜோடி ஆதிக்கம் செலுத்தியது. கன்னி டெஸ்ட் போட்டியில் கம்பீரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய  மயாங்க் அகர்வால் முதல் சதத்தைப் பூர்த்தி செய்தார்.  ஒரு வழியாக மதிய இடைவேளைக்குப் பின்பு ரோஹித் - மயாங்க் ஜோடியை தென் ஆப்பிரிக்க அணியின் சுழற்பந்துவீச்சாளர் கேசவ் மகாராஜ் பிரித்தார்.  சிறப்பாக விளையாடிய ரோஹித் சர்மா 176 ரன்கள் எடுத்திருந்த போது கேசவ் மகாராஜ் பந்துவீச்சில் ஸ்டெம்பிங் மூலம் வெளியேறி னார். அடுத்து களமிறங்கிய புஜாரா (6), கேப்டன் கோலி (20) ரஹானே (15) ஆகியோர் பெரிதாக சோபிக்கவில்லை. ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுபக்கம் துடிப்பாக ரன் விளாசிக் கொண்டிருந்த மயாங்க்  அகர்வால் இரட்டை சதமடித்து புதிய வரலாறு படைத்தார். மேற்கொண்டு 15 ரன்கள் சேர்த்த அகர்வால், எல்கர் பந்துவீச்சில் பெவிலியன் திரும்பினார்.    அகர்வால் ஆட்டமிழந்தவுடன் ஜடேஜா (30) மட்டுமே ஓரளவு ரன் சேர்த்தார். விஹாரி (10), சஹா (21) சொதப்ப முதல் இன்னி ங்ஸை முடித்துக் கொள்வதாக கேப்டன் கோலி அறிவித்தார்.  ஜடேஜா (30), அஸ்வின் (1) ஆட்ட மிழக்காமல் களத்திலிருந்தார்.  இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 136 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 502 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் அதிகபட்சமாக இந்திய வம்சாவளி வீரர் கேசவ் மகாராஜ் 3 விக்கெட்டுகளை  கைப்பற்றினார்.  2-வது நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 39 ரன்கள் எடுத்துள்ளது. 

சாதனைகள்...

300                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                 தொடக்க வீரராக களமிறங்கி 300 ரன்கள் குவித்த 3-வது இந்திய ஜோடி (317) என்ற பெருமையை ரோஹித் சர்மா - மயாங்க் அகர்வால் ஜோடி பெற்றது. முதலிடத்தில் மேன்கட் -  பங்கஜ் ராய் (413 ரன்கள் - எதிர் நியூஸி.,) ஜோடியும்,  2-வது இடத்தில் சேவாக் - டிராவிட் (410 ரன்கள் - எதிர் பாக்.,) ஜோடியும்  உள்ளனர். 

317                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                            தென்ஆப்பிரிக்கா அணிக்கெதிராக அதிக ரன் குவித்த இந்திய ஜோடி என்ற சாதனையை ரோஹித் சர்மா - மயாங்க் அகர்வால் ஜோடி படைத்தது. இதற்கு முன்பு சேவாக் - டிராவிட் ஜோடி (268 - சேப்பாக்கத்தில் - 2008) குவித்ததே முந்தைய சாதனையாக இருந்தது. 11 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த சாதனையை ரோஹித் சர்மா - மயாங்க் அகர்வால் ஜோடி முறியடித்தது.                                                                                                                                                                                                                                 

4                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                        மாயங்க் அகர்வால் (215 ரன்கள்) தென் ஆப்பிரிக்க அணிக்கெதிராக இரட்டை சதமடித்ததன் மூலம் டெஸ்ட் அரங்கில் இரட்டை சதமடித்த 4-வது இந்தியர் என்ற பெருமையை பெற்றார்.