2 உலகக்கோப்பை தொடர்களை வென்று கொடுத்த இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி இங்கிலாந்து உலகக்கோப்பை தொடருடன் விருப்ப ஓய்வு பெற்று பிராந்திய இராணுவத்தின் பாராசூட் ரெஜிமென்ட் லெப்டினன்ட் கர்னலாக 2 மாத காலம் பணியாற்றினார். அதன் பின்பும் கிரிக்கெட் துறையி லிருந்து விலகி இருக்கும் தோனி, “ஜனவரி வரை என்னிடம் எதும் கேட்க வேண்டாம்” எனக் கூறி பொழுது போக்கிற்கு முன்னுரிமை அளித்து வரும் நிலையில், தோனி ராணுவ வீரர்களின் உண்மையான கதை தொகுப்பை வைத்து தொலைக்காட்சி தொடர் தயாரிக்கத் திட்டமிட்டுள்ள தாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தோனி தயாரிக்கும் இந்த தொடர் ஸ்டுடியோநெக்ஸ்ட், எபிசோடுக் கதைகளின் தனித்துவமான தொகுப்பை முன்வைக்கவுள்ளது. இந்த நிகழ்ச்சி 2020-ஆம் ஆண்டு வெளியாகும் என செய்திகள் தெரிவிக் கின்றன.