முரட்டுத்தனத்துக்குப் பெயர் பெற்ற ரக்பி விளையாட்டு அபாயகரமான விளையாட்டாக இருந்தாலும் அந்த விளையாட்டை விடக் கால்பந்து விளை யாட்டு மிகவும் அபாயகரமானது. காரணம் ரக்பி விளையாட்டில் களமிறங்குபவர்கள் நல்ல உடல்வாகுடன் களமிறங்குவார்கள். தேங்காய் போன்ற அமைப்புடைய பந்தை வைத்திருப்ப வரை முட்டித்தள்ளுவார்கள். உடல் முழுவதும் பாதுகாப்பு கவசம் இருப்பதால் பெரியள வில் அடி விழாது. ஆனால் கால்பந்தில் களமிறங்குபவர்கள் ஓட்டத்தில் மட்டுமே அதிக பயிற்சி பெற்றிருப்பதால் உடல்வாகு பெற்றிருக்கமாட்டார்கள். பந்து எங்குச் செல்கிறதோ அதை உதைப்பார்கள். காலணியில் ஆணி போன்ற அமைப்பு இருப்பதைக் கண்டுகொள்ளாமல் எதிரணி வீரரின் தலைக்கு அருகில் பந்து சென்றாலும் அதை உதைப்பார்கள். இந்த முரட்டு உதையால் மாரடைப்பு, ரத்த காயம், வெட்டுக்கா யம் என அனைத்தும் கால்பந்து விளையாட்டில் அரங்கேறும். எனினும் தற்போதைய நவீனக் காலத்தில் இது பேசனாகிவிட்டது.