tamilnadu

img

தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் கால்பந்து வீரர் படுகொலை

தென் ஆப் பிரிக்கா நாட்டில் நடைபெறும் கால்பந்து கிளப் போட்டிகளில் மார்க் பாட்செலார் பிரபல மானவர். கால்பந்து போட்டியிலிருந்து ஓய்வு பெற்ற பின் தொலைக்காட்சி மற்றும் வர்த்தகம் தொடர்பான துறைகளில் கவனம் செலுத்தி  வந்தார்.  இந்நிலையில், ஜோகன்னஸ் பர்க்கில் உள்ள தன் வீட்டிற்கு செல்லும் போது மார்க் (செவ்வாயன்று - இந்திய நேரப்படி) சுட்டு கொலை செய்யப்பட்டார். கொலையின் நோக்கம் தெரியவில்லை என்றாலும், 2013-ஆம் ஆண்டு ரீவா ஸ்தீன்காம்ப்பை கொலை செய்ததாகக் கைது செய்யப்பட்ட ஆஸ்கர் பிஸ்டோரியஸ்க்கும் (பாரா ஒலிம்பிக்ஸ் வீரர்), மார்க்கும் இடையே மோதல் போக்கு இருந்துள்ளது. ஆஸ்கர் எனது கால் உடைக்கப் போவதாக மிரட்டினார் என மார்க் பாட்செலார் முன்பு கூறியிருந்தார். ஒருவேளை இந்த சம்பவத்திற்காக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் தென் ஆப்பிரிக்கா காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

49 வயதான மார்க், தென் ஆப்ரிக்காவின் ஒர்லாண்டோ பைரேட்ஸ், கைஷேர் ஷீப்ஸ், மாமிலோதி சண்டவுண்ஸ், மோரோகா ஸ்வாலோஸ், சூப்பர்ஸ்போர்ட்  ஆகிய அணிகளுக்கு விளையாடியுள்ளார். மார்க் பாட்செலார் திடீர் மரணம் கால்பந்து உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.