tamilnadu

img

விபிசி நினைவுச் சுடருக்கு காஞ்சிபுரத்தில் வரவேற்பு

காஞ்சிபுரம், ஜன.21- சிஐடியுவின் 16வது அகில இந்திய மாநாடு சென்னையில் நடைபெறு கிறது. இதையொட்டி  சென்னையில் துவங்கிய விபிசி நினைவுச் சுடர், காஞ்சிபுரத்திற்கு வந்தபோது உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சென்னை திருவொற்றி யூரில் ஞாயிறன்று சிஐடியு மாநிலச் செயலாளர் சி.திரு வேட்டை தலைமையில் துவங்கிய வி.பி.சி நினைவுச் சுடர் பயணம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை மாவட்டம் வழியாக செவ்வாய்க்கிழமை (ஜன. 21) காஞ்சிபுரம் வந்தடைந்தது. இந்தப் பயணக்குழுவில் ஆட்டோ சங்க மாநில பொருளாளர் ஏ.சி.மனோ கரன், திருவண்ணாமலை மாவட்டச் செயலாளர் பாரி (சிஐடியு), திருவண்ணா மலை மாவட்ட போக்கு வரத்து மண்டலச் செயலா ளர் சேகர், போக்குவரத்து சம்மேளன நிர்வாகி எஸ்.முரளி ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். காஞ்சிபுரம் செவிலி மேட்டில் சிஐடியு சார்பில் வி.பி.சி நினைவுச் சுடருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டது. காந்தி சாலை பெரியார் தூண் அருகே நடை பெற்ற வரவேற்புக் கூட்டத் திற்கு சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் டி.ஸ்ரீதர் தலைமை தாங்கி னார். மாவட்ட துணைத் தலை வர்கள் என்.நந்தகோபால், ஆர்.மதுசூதனன், மாவட்டக்குழு உறுப்பினர் கே.ஜீவா, மாவட்ட பொரு ளாளர் ஜி.வசந்தா ஆகியோர் முன்னிலை வகித்தனர். வி.பி.சி நினைவுச் சுடர்  பயணக்குழுவிற்கு  தலைமை தாங்கும் சிஐடியு மாநிலச் செயலாளர் சி.திருவேட்டை சிறப்புரையாற்றினார்.

;