tamilnadu

img

சோவல் அசாகி  நிறுவன தொழிலாளர் ஆர்ப்பாட்டம்

சோவல் அசாகி  நிறுவன தொழிலாளர் பிரச்சனையில் அரசு தலையிட வேண்டும், சிஐடியு காஞ்சிபுரம் மாவட்டச்  செயலாளர் இ.முத்துக்குமார் உள்ளிட்ட தொழிலாளர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் திருப்பெரும்பதூர் பேருந்து நிலையம் அருகில் வெள்ளியன்று (மே 24)  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் மாவட்டச் செயலாளர் இ.சங்கர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாநில துணைத் தலைவர் சந்திரன்,   சிஐடியு மாவட்டச் செயலாளர் இ. முத்துக்குமார், மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.கண்ணன், திருப்பெரும்பதூர் பகுதி செயலாளர் பி.ரமேஷ், மாவட்டக் குழு உறுப்பின் தமிழரசி உள்ளிட்ட பலர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து சிஐடியு மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன் பேசினார்.