tamilnadu

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு

காஞ்சிபுரம், ஜூன் 6 - பத்தாம் வகுப்பு மேல்நிலை பொதுத்தேர்வு எழுதும் மாணவர்க ளுக்கு காஞ்சிபுரம் மாவட்டத்தில் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்  பட்டுள்ளது. கொரோனா வைரஸ் நோய் தொற்றை பரவாமல் தடுக்கும் பொருட்டு  ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் அமலில் உள்ள நிலையில், இந்த  மாதம் பத்தாம் வகுப்பு, மேல்நிலை முதலாமாண்டு, இரண்டாமாண்டு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற உள்ளது.  தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் தேர்வு எழுதும் மாணவர்கள் நுழைவுச்சீட்டு பெறும் வகையிலும், ஆசிரியர்கள் முன்னேற்பாடுகளை செய்யும் பொருட்டும் 8ந் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. இந்த நடைமுறை 24ந் தேதி வரை  அமலில் இருக்கும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பொன்னையா தெரிவித்துள்ளார்.