tamilnadu

மின்னல் வேகத்தில் ரூ.4 லட்சம் கொள்ளை

கல்பாக்கம், ஏப். 26-காஞ்சிபுரம் மாவட்டம், கல்பாக்கம் அடுத்த சதுரங்கப்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் துளசிதரன்(62). இவர், கல்பாக்கத்தில் இயங்கி வரும் அணுமின் நிலையத்தில் ஒப்பந்த பணிகளை மேற்கொள்ளும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதாக கூறப்படுகிறது.இந்நிலையில், கல்பாக்கம் நகரியப்பகுதியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் தனது வங்கி கணக்கில் இருந்த ரூ.4 லட்சம் ரொக்கத்தை எடுத்துக்கொண்டு, நகரியப்பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது,சாய்பாபா கோயில் அருகே பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர், இவரது வாகனத்தின் மீது உரசி சென்றதாகவும். இதில், நிலை தடுமாறி துளசிதரன் கீழே விழுந்ததாகவும் தெரிகிறது.அப்போது, மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர் துளசிதரனின் வாகனத்தில் இருந்த ரூ.4 லட்சம் ரொக்கத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக, அவர் அளித்த புகாரின் பேரில், கல்பாக்கம் காவல்நிலையத்தினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

;