tamilnadu

img

ரூ.5000 நிவாரணம் வழங்குக:  கைத்தறி நெசவாளர்கள் கோரிக்கை


காஞ்சிபுரம், ஏப்.14-
கைத்தறி நெசவாளர்கள் உள்ளிட்ட அனைத்து அமைப்பு சாரா தொழிலா ளர்களுக்கும் மாநில அரசு 5,000 ரூபாய் நிவாரண தொகை வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு கைத்தறி நெசவுத் தொழிலாளர் சம்மேளனம் (சிஐடியு ) வலியுறுத்தி யுள்ளது.
இது குறித்து சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் இ. முத்துக்குமார் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசு அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு அறிவித்துள்ள நிவாரண நிதி முதல் கட்டம் ஆயிரம் பெரும்பான்மையான தொழிலாளர்களுக்கு அவர்கள் வங்கிக் கணக்கில் சேரவில்லை.
ஊரடங்கு உத்தரவால் அனைத்து அமைப்புசாரா தொழிலாளிகளும் வேலை இழந்து வறுமையில் சிக்கி இருக்கிறார்கள். அன்றாட உழைப்பை நம்பி வாழ்க்கை நடத்தும் இவர்கள் கடந்த 21 நாட்களாக வீட்டில் முடங்கி இருக்கிற பின்னணியில் அரசு அறிவித்த  உணவுப் பொருட்கள் கூட வழங்கப் படவில்லை என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

இந்த நிலையில், ஊரடங்கு உத்தரவு மேலும் நீட்டிக்கப்ப ட்டுள்ளதால் இரண்டாவது கட்ட நிவாரணமாக ரூபாய் ஆயிரத்தை தமிழக அரசு அறிவித்திருப்பது போதுமானதல்ல. அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சம் ரூபாய் 5000  வழங்கவேண்டும். இந்த பணம் வங்கியில் செலுத்துவதன் மூலமாக இந்த தொழிலாளிகளுக்கு ஒரு போதும் பயன்தராது.  வங்கிகள் முழுவதும் அடைக்கப்பட்ட பின்னணி யில் வீதிகள் முழுவதும் கட்டுப்பாடுகள் கடுமையாக் கப்பட்டு இருக்கிற சூழலில் வங்கிகளுக்கு செல்ல முடியாத நிலையில் மக்கள் இருக்கிறார்கள்.
இவர்களுக்கு அரசு அறிவிக்கிற நிவாரணத் தொகை ரொக்கமாக ரேஷன் கடைகள் மூலமாகவே நலவாரிய அட்டைகளை மையப்படுத்தி நேரடியாக நிவாரணங்களை வழங்க வேண்டும். மேலும் ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட நலாரிய பதிவில் இல்லாத அனைத்து முறைசாரா தொழிலாளர் குடும்பங்க ளுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்.
நலவாரியத்தில் உறுப்பினராக இருந்தால் தான் வழங்கப்படும் என்ற தற்போதைய நிபந்தனையை விலக்கிக் கொண்டு அனைத்து கைத்தறி நெசவாளர்கள் மற்றும் அனைத்து அமைப்புசாரா தொழிலா ளர்கள் குடும்பங்களுக்கும் குடிமைப்பொருள் அட்டை அடிப்படையில் நிவாரண நிதியை வழங்க வேண்டும்.
இவ்வாறு முத்துக்குமார் தெரிவித்துள்ளார்.