காஞ்சிபுரம், ஆக.29-
அஞ்சல் துறை சார்பில் தமிழ் நாட்டில் 50 நகரங்களில் அஞ்சலக ஏற்றுமதி மையம் அமைக்கப்பட உள்ளதாக அதிகாரி தெரிவித்தார்.
காஞ்சிபுரத்தில் அஞ்சல்துறை சார்பில் மின் வணிகம் மற்றும் அஞ்ச லக ஏற்றுமதி மையம் தொடங்கப் பட்டிருப்பது குறித்த விளக்க கூட்டம் நடைபெற்றது. சென்னை மண்டல அஞ்சல்துறைத் தலை வர் ஜி.நடராஜன் தலைமை தாங்கி னார். அஞ்சல்துறையின் வெளி நாட்டு வர்த்தகப்பிரிவு இயக்குநர் ராஜலட்சுமி தேவராஜ், கைத்தறி ஏற்றுமதி மற்றும் ஊக்குவிப்பு கவுன்சில் நிர்வாக இயக்குநர் என்.ஸ்ரீதர், காஞ்சிபுரம் பட்டுப்பூங்காவின் செயல் இயக்குநர் வி.ராமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அஞ்சல்துறை சென்னை மண்டல இயக்குநர் சோமசுந்தரம் வரவேற்றார். அஞ்சல்துறை தலை வர் பி.பி.ஸ்ரீதேவி சிறப்பு விருந்தி னராக கலந்து கொண்டு தென்கொரி யாவுக்கு வாடிக்கையாளர் ஒருவர் அனுப்பிய பார்சலை பெற்றுக் கொண்டு அதற்குரிய ரசீது வழங்கி னார்.
அஞ்சல்துறைத் தலைவர் ஜி.நடராஜன் பேசும்போது, “தமிழ்நாட்டில் 50 நகரங்களில் அஞ்சல்துறை ஏற்றுமதி மையங்கள் தொடங்கப்பட்டுள்ளது. ஏற்றுமதி யாளர்கள் அவர்கள் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டே 219 நாடுகளுக்கு பொருட்களை அஞ்சல் துறை மூலம் ஏற்றுமதி செய்யலாம் என்றார்.