tamilnadu

22 ஆம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்

 செங்கல்பட்டு, ஆக.19-  காஞ்சிபுரம் மாவட்ட மாதாந்திர விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஆகஸ்ட் 22 ஆம் தேதி நடை பெறும் என மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை யில்,ஆகஸ்ட் 22 ஆம் தேதி வியாழனன்று காலை 10.00 மணிக்கு ஆட்சியர் வளாகத்தில் உள்ள பொது மக்கள் நல்லுறவு மைய கூட்ட அரங்கில் நடைபெறும். கூட்டத்தில் விவசாய பெரு மக்கள் அனைவரும் தவறா மல் கலந்து கொண்டு முக்கிய வேளாண்மைத்துறை மற்றும் சார்பு துறைகள் தொடர்பான கோரிக்கை மனுக்கள் அளிக்கலாம்’ என தெரிவிக்கப்பட்டு ள்ளது.