tamilnadu

பட்டபகலில் பணம் கொள்ளை

காஞ்சிபுரம், ஜூன் 4- காஞ்சிபுரத்தில் விவசாயி ஒருவர் நகையை அடமானம் வைத்து எடுத்துச் சென்ற பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். காஞ்சிபுரம் அடுத்த சிறுகாவேரிபக்கம் கிராமத்தை சேர்ந்த வர் மேகநாதன். இவர் தனது மனைவி, மருமகளுடன் சென்று  காஞ்சிபுரம், ஏகம்பரநாதர் கோவில் அருகிலுள்ள வங்கியில்  4 சவரன் நகையை அடமானம் வைத்துள்ளார். அதற்கான பணம் 81 ஆயிரம் ரூபாயை பெற்றுக் கொண்டு, இரு சக்கர  வாகனத்தில் கிராமத்தை நோக்கி சென்று கொண்டிருந்தார். இருசக்கர வாகனத்தில், மாமனார் மாமியாருடன் அமர்ந்து  சென்ற மருமகள், வங்கியில் பெற்ற பணத்தை பையில் சுற்றி  தனது மடியில் வைத்திருந்தார். ஒலிமுகம்மது பேட்டை அருகே அவர்கள் சென்று கொண்டிருந்தபோது, திடீரென  பின்னால் இருச்சக்கர வாகனத்தில் ஹெல்மட் அணிந்து வந்த வர்கள் மருமகளிடமிருந்து பணப்பையை பறித்துக் கொண்டு சென்றனர். இதுகுறித்து சிவகாஞ்சி காவல்நிலையத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது. பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் பட்டப்பகலில் நடைபெற்ற இந்தக் கொள்ளைச் சம்பவம் மிகுந்த பரபரப்பை உருவாக்கியுள்ளது.