காஞ்சிபுரம், செப்.12- சென்னை முதல் சேலம் வரை எட்டுவழிச்சாலை அமைப்பதற்காக கையகப்ப டுத்தப்பட்ட நிலங்களை மறு ஒப்படைப்பு செய்திட வலியுறுத்தியும் அது தொடர்பாக போடப்பட்ட பொய் வழக்குகளை திரும்பப் பெற வலியுறுத்தி யும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு நில உரிமை கூட்டமைப்பு, பாலாற்று பாதுகாப்பு கூட்டியக்கம், விவசாய தொழிலாளர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு விவசாய சங்கங்களின் சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவல கம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் வியாழனன்று (செப் 12) நடைபெற்றது. எட்டு வழிச் சாலையை ரத்து செய்து உயர்நீதி மன்றம் அளித்திருக்கின்ற தீர்ப்பை நடைமுறைப் படுத்த வேண்டும், எட்டு வழிச்சாலை அமைப்ப தற்காக முன்னறிவிப்பின்றி விவசாய நிலங்களில் வெட்டிய மரங்கள் மற்றும் இதர பொருட்களுக்கும் நட்ட ஈடு வழங்கிட வேண்டும், விவசாய நிலங்களில் கேஸ் குழாய் புதைக்கும் நடவடிக்கையைக் கைவிட வேண்டும், விவசாய நிலங்களில் உயர்மின் அழுத்தக் கோபுரங்களை அமைக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறு த்தப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செய லாளர் கே.நேரு தலைமை தாங்கினார். விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ஜி.மோகனன், பொருளாளர் என்.சாரங்கன், பாலாறு பாதுகாப்பு கூட்டியக்க ஒருங்கிணைப்பாளர்கள் காஞ்சி அமுதன், சீதா வரம்மோகன், சிபிஐ நிர்வாகி மூர்த்தி, விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் டி.கோவிந்தன்,செயலாளர் பி.சண்முகம் விவசாயிகள் சங்க காஞ்சி வட்டச் செயலா ளர் இ.லாரன்ஸ், மார்க்சிஸ்ட் கட்சியின் உத்திரமேரூர் வட்டச் செயலாளர் சி.பாஸ்கரன், நில உரிமை கூட்டமைப்பின் நிர்வாகிகள் பால்ராஜ், ஜெகதீஸ்வரி உள்ளிட்ட பலர் பேசினர். ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் பி.டில்லிபாபு பேசினார்.