tamilnadu

விமானப் படையில் வேலைவாய்ப்பு வழிமுறைகள்:  விழிப்புணர்வு கருத்தரங்கம்

காஞ்சிபுரம், மார்ச் 10- காஞ்சி ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் விமானப்படையில் வேலைவாய்ப்பு பெறுவதற்கான வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் கல்லூரியின் நிறுவனர் போஸ் தலைமையில் நடைபெற்றது.  இக்கருத்தரங்கில் சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் மண்டலத்தின் விங் கமாண்டர் சைலேஷ்குமார், காஞ்சிபுரம் வேலைவாய்ப்பு அலுவலக துணை இயக்குனர் (பொ) ரேவதி, ஜூனியர் வேலைவாய்ப்பு அலுவலர் தணிகைவேலு ஆகியோர் கலந்துகொண்டு, விமானப்படையில் என்ன வேலை வாய்ப்புகள் இருக்கின்றது, இதனை எப்படி எதிர்கொள்வது என்று மாணவர்களுடன் கலந்துறையாடினர். 

;