உத்தரமேரூர், நவ.12- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு முழு ஊதியம் வழங்கிட வலியுறுத்தி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளி கள் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட னர். காஞ்சிபுரம் மாவட்டத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் நடைபெற்றுவரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 மணி நேர வேலைக்கு முழு ஊதியம் வழங்கிட வேண்டும். ஆனால் இதை எந்த ஊராட்சியி லும் கடைப்பிடிப்பதில்லை என கூறப்படு கின்றது. இந்நிலையில் உத்திரமேரூர் வட்டத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கான சட்ட விதிமுறை களுக்குட்பட்டு மாற்றுத்திறனாளிகளுக்கு நீல வண்ண சிறப்பு ஜாப் அட்டை வழங்கி நூறு நாள் வேலை தருவதை உறுதி செய்திட வேண்டும், வீடு இல்லாத மாற்றுத் திறனாளி குடும்பங்களுக்கு அரசாணையின் படி பசுமை வீடு இந்திரா நினைவு குடியிருப்பு திட்டங்களில் முன்னுரிமை வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் உத்தரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில் காத்திருக்கும் போராட்டம் செவ்வாயன்று (நவ 22) நடை பெற்றது. போராட்டத்திற்கு வட்டத் தலைவர் வி.எழுமலை தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் வி.முனுசாமி, செயலாளர் வி.அரிகிருஷ்ணன், பொருளாளர் பிபி.பாலாஜி, வட்டச் செயலாளர் ஜான்சன், பொருளாளர் அன்பு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாநில துணைத் தலைவர் ப.பாரதிஅண்ணா போராட்டத்தை நிறைவு செய்து பேசினார். வட்டார வளர்ச்சி அலுவலரிடம் சங்கத்தின் நிர்வாகிகள் கோரிக்கை மனு அளித்தனர்.