காஞ்சிபுரம், ஜூலை 30 - ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தை எலும்பு மூட்டு வாரமாக கொண்டாட மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு எலும்பு மூட்டு மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் எஸ்.ஜி. திருமலைச்சாமி, செயலாளர் பி.டி.சரவணன் ஆகியோர் கூறியதாவது: 2012ஆம் ஆண்டு முதல் ஆண்டு தோறும் ஆகஸ்ட் மாதம் 4 ஆம் தேதி எலும்பு மூட்டு தின மாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் வாரம் முழுவ தும் எலும்பு மூட்டு வாரமாக கொண்டாடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. சிதைவு நோயில் குறைபாடு ஏற்படுவதை தவிர்ப்பது எப்படி என்ற கருப்பொருளை மையமாக வைத்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தமிழ கம் முழுவதும் நடத்தவுள்ளோம். சிதைவு நோயானது முழங்கால், கணுக்கால், முது கெலும்பு போன்ற முக்கிய மூட்டுக்களில் ஏற்படுகிறது.
இதற்கு உடலை எடையை முழுமை யாக பராமரிப்பது, உடற்பயிற்சிகளை செய் தல், வைட்டமின் மற்றும் கால்சியம் நிறைந்த சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளு தல், தசையின் வலிமையை மேம்படுத்துதல், மூட்டுக்களையும், முதுகெலும்புகளையும் அதிகமாக பயன்படுத்துவதை தவிர்த்தல், தேவையான மருத்துவ ஆலோசனைகளை பெறுதல் ஆகியவற்றின் மூலம் சிதைவு நோயை தடுக்க முடியும். இது குறித்து விழிப்புணர்வு பதாகை களை சுவரொட்டிகளாக காட்சிப் படுத்துதல், வானொலி மற்றும் தொலைக்காட்சிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துதல், எளிமையான யோகா பயிற்சிகளை கற்றுத் தருதல் என பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.