காஞ்சிபுரம் அருகே காரும் வேனும் நேருக்குநேர் மோதிகொண்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி அரியலூரில் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று இரவு தனது நண்பர்கள் இருவருடன் பேரம்பாக்கம் செல்ல காஞ்சிபுரம் நோக்கி சென்றுள்ளார். அப்போது கார் காஞ்சிபுரம் – வந்தவாசி சாலையில் மானாம்பதி அருகே வந்துகொண்டிருந்தபோது, எதிரே வந்த வேன் எதிர்பாராத விதமாக கார் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த சுந்தரமூர்த்தி உட்பட அவரின் நண்பர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த பெருநகர் போலீசார் உயிரிழந்த 3 பேர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனைதொடர்ந்து விபத்து குறித்து பெருநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.