districts

img

கள்ளக்குறிச்சி அருகே ஆம்புலன்ஸ் விபத்தில் 3 பேர் பலி

கள்ளக்குறிச்சி, ஜூன் 10- கள்ளக்குறிச்சி அருகே வியாழனன்று (ஜூன் 10) அதிகாலை ஆம்புலன்ஸ் வாகனம்  டயர் வெடித்து மரத்தில் மோதிய விபத்தில்  கர்ப்பிணி பெண் உட்பட 3 பேர் உயிரி ழந்தனர். இருவர் படுகாயம் அடைந்தனர்.. கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த வடபொன்பரப்பி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மல்லாபுரம் கிரா மத்தை சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி  ஜெயலட்சுமி. இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த தால் சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் அவரை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பினர். உடன் ஜெயலட்சுமியின் மாமி யார் செல்வி, நாத்தனார் அம்பிகா ஆகியோ ரும் சென்றனர்.

ஆம்புலன்ஸ் ஆலத்தூர் ஏரிக்கரை அருகே சென்று கொண்டிருக்கும் போது திடீ ரென ஆம்புலன்ஸின் டயர் வெடித்ததில், வாக னம் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை யோர மரத்தின் மீது மோதியது. இதில் ஆம்புலன்ஸில் இருந்த செல்வி,  அம்பிகா ஆகிய இருவரும் சம்பவ இடத்தி லேயே பலியானார்கள். படுகாயமடைந்த கர்ப்பிணிப்பெண் ஜெயலட்சுமியும ஆம்பு லன்ஸ் ஓட்டுநர் மற்றும் பெண் மருத்துவ உதவி யாளர் ஒருவரும் மற்றொரு ஆம்புலன்ஸ்  மூலம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ஜெயலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். மூன்று பேரின் உடல்களும் கள்ளக் குறிச்சி அரசு மருத்துவமனையில் வைக்கப் பட்டுள்ளன. மேலும் விபத்துக்குள்ளான ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் பெண் மருத்துவ உதவியாளர் ஆகிய இருவரும் தீவிர மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். இச்சம்பவம் கள்ளக்குறிச்சி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.