காஞ்சிபுரம்,பிப்.12- காஞ்சிபுரம் அருகே வையாவூர் கிராம ஏரியில் அவ்வப்போது அந்த பகுதி இளைஞர்கள், இளம் சிறார்கள் மீன்பிடித்து வருவது வழக்கம். அதன்படி புதனன்று(பிப்.12) இளம் சிறார்கள் மீனை பிடிக்க வலையை வீசி இருக்கின்ற னர். அப்பொழுது இழுக்க முடியாத அளவிற்கு ஒரு பொருள் தட்டுப்படவே அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த சிறுவர்கள் அருகில் இருந்த பெரியவர் அழைத்தனர். அவர்கள் வந்து வலையில் சிக்கிய பொருளை ஏரியில் இருந்து எடுத்து பார்த்தனர். அப்போது பீடம் மற்றும் கால்கள் மட்டுமே கொண்ட சிலை இருந்தது தெரிய வந்தது. உருவம் இல்லாமல் வெறும் பீடமும் கால்பகுதி மட்டுமே சிலையாக இருந்த தைக் கண்ட அப்பகுதி மக்கள் அச்சிலையை கொண்டு வந்து கோவிலில் வைத்து நெற்கதிர்களை தூவி அதன் மீது இந்த சிலையை வைத்துள்ளனர். பின்னர் வருவாய் துறையினருக்கு தகவல் அளித்தனர். அங்கு வந்த கிராம நிர்வாக அலுவலர் அந்த சிலையை மீட்டு விசா ரணை செய்து வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், “இது நிச்சயம் ஐம்பொன் சிலையாகதான் இருக்கும்” என்றனர். கடந்த வாரம் எல்லை அம்மன் ஆலய கும்பாபி ஷேகம் நடந்து முடிந்த இந்த தருவாயில் ஏரிக்கரை பகுதியில் இந்த உருவம் இல்லாத பீடம் மற்றும் கால்களைக் கொண்ட சிலை கிடைத்திருப்பது அப்பகுதி மக்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சிலை குறித்து இந்து சமய அறநிலைத்துறை விசாரணை செய்து நட வடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர். அவர்கள் விசாரணை செய்த பிறகுதான் இந்த சிலை என்னுடைய மதிப்பு தெரிய வரும் என்ற உலோகத்தால் ஆன சிலை எனவும் தெரிய வரும் என நிர்வாக அலுவலர் தெரிவித்தார்.