tamilnadu

img

359 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்

காஞ்சிபுரம், ஜூலை 28- காஞ்சிபுரம் அருகே சிறு காவேரிப்பாக் கத்தில் 359 மூட்டை ரேஷன் அரிசியை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். சிறு காவேரிப்பாக்கம் பிள்ளையார் கோவில் பின்புறம் சந்தேகத்திற்குரிய முறை யில் 4 லாரிகள் நின்றிருந்ததை காவல்துறை யினர் சோதனையிட்டனர். அந்த லாரிகளில் 50 கிலோ எடையுள்ள 284 மூட்டை, 25 கிலோ எடையுள்ள 75 மூட்டை என 359 மூட்டை  ரேசன் அரிசி ஏற்றி இருப்பதை கண்டுபிடித்த னர். இது தொடர்பாக சிறு காவேரிப் பாக்கத்தை சேர்ந்த ஆனந்தன் (35), டெல்லி பாபு (19) ஆகியோரை கைது செய்ததுடன்,  லாரிகளை பறிமுதல் செய்து  காஞ்சிபுரம் குடிமைப்பொருள் புலனாய்வுத் துறை வசம் ஒப்படைத்தனர்.

;