சின்னசேலம், ஜூன் 7- சின்னசேலம் அருகே அமைக்கப்பட்டுள்ள சாலைப் பணியை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் கிரண்குராலா, முறையாக சாலை அமைக்கப்பட வில்லை என துறை அதிகாரி களை கடிந்து கொண்டார். கள்ளக்குறிச்சி மாவட்டம் பெத்தானூர் கிராமத்தில் தமிழ்நாடு அரசு ஊரக சாலை கள் 2017-18ஆம் ஆண்டு திட்டத்தின் கீழ் 42 லட்சத்து 53 ஆயிரம் ரூபாய் மதிப் பீட்டில் கனியாமூர் வரையி லான ஒரு கிலோ மீட்டருக்கு புதிதாக அமைக்கப்பட்ட தார்சாலை பணிகள் முடிவ டைந்துள்ளன. இதனை ஆய்வுசெய்த மாவட்ட ஆட்சியர் கிரண் குராலா சாலை சரியான கலவையில் போடப்பட்டுள் ளதா என ஆய்வு செய்தார்.
அப்போது சாலையோரத் தில் ஏற்படும் மண் அரிப் பினை சரி செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார். பின்னர் பூசப்பாடி முதல் தென்பொன்பரப்பிவரை 1.5 கோடி ரூபாய் மதிப்பில் மூன்று கிலோ மீட்டருக்கு நடைபெற்றுவரும் சாலைப் பணியை பார்வையிட்டார். அப்போது செம்மண் போடப்பட்டுள்ள சாலையை சிறிதளவு பள்ளம் எடுத்து ஆய்வு செய்து அதன் கீழே உள்ள லேயர் எனப்படும் இடத்தில் சரியான அளவு ஜல்லிகள் போடப்படாமல் இருந்ததைக் கண்டு துறை அதிகாரிகளை கடிந்து கொண்டார். பணிகள் நடை பெறும் போது உடனுக்குடன் ஆய்வு செய்து அறிக்கை கொடுக்க வேண்டுமென துறை அதிகாரிகளை எச்ச ரித்தார். அதேபோல் தமிழ்நாடு ஊரக சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சங்கராபுரம் அடுத்த செம்பரம்பட்டு - அர சம்பட்டு கிராம சாலை மற்றும் மேலேரி - சோழம் பட்டு கிராம தார் சாலைகளை யும் ஆய்வு செய்தார்.