tamilnadu

img

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி கள்ளக்குறிச்சியில்  கையெழுத்து இயக்கம்

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி காங்கிரஸ் கமிட்டி சார்பில் கள்ளக்குறிச்சியில்  கையெழுத்து இயக்கம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி சிறப்புரையாற்றினார். மாவட்டத் தலைவர் ஜெய்கணேஷ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் டி.ஏழுமலை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் ஏ.வி.சரவணன், மதிமுக மாவட்டச் செயலாளர் க.ஜெய்சங்கர், திமுக நகரச் செயலாளர் சுப்புராயலு உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். முன்னதாக கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பில் பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

;