உளுந்தூர்பேட்டை, ஜூன் 13- தலித் இளைஞனும், மாற்று சமூ கத்தைச் சேர்ந்த பெண்ணும் காத லித்து திருமணம் செய்து கொண்ட தால் ஆத்திரமுற்ற ஒரு பிரிவினர் தலித் குடியிருப்புகளை தாக்குவ தற்கு முயன்றுள்ளனர். எனவே சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட ஜோடிக்கும், அவர்களது குடும்பத்தி னருக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கிளி யூர் கிராமத்தைச் சேர்ந்த தவிடன் என்பவரின் மகன் இளங்கோவன் (25). பூவனூர் கிராமத்தில் வசிக்கும் கருப்பன் (எ)மாரிமுத்து என்பவரின் மகள் சுகன்யா (23). இளங்கோவனும், சுகன்யாவும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். சுகன்யாவின் குடும் பத்தினர், உறவினர்கள் இளங்கோ வனை கண்டித்து வந்துள்ளனர். இந்நிலையில் சுகன்யாவிற்கு திரு மணம் நிச்சயிக்க ஏற்பாடுகள் நடந்துள்ளது. இதனால் காதலர்கள் இருவரும் கடந்த ஞாயிறன்று (ஜுன் 7) இருவர் வீட்டிற்கும் தெரியா மல் வெளியேறினர். மாரிமுத்து தரப்பினர் திருநாவ லூர் காவல் நிலையத்தில் சுகன் யாவை இளங்கோவன் கடத்திச் சென்று விட்டதாக புகார் அளித்துள் ளனர். காவல் துறையினர் இளங் கோவனின் பெற்றோரையும், நண் பர்களையும் விசாரித்தும் கண்டு பிடிக்க முடியவில்லை. இதனால் ஆத்திரமுற்ற மாரிமுத்து குடும்பத்தி னரும், உறவினர்களும் பூவனூர் மற்றும் கிளியூரில் உள்ள பிற்ப டுத்தப்பட்ட மக்கள் ஒரு பகுதியினரி டையே ஊர்க்கூட்டம் நடத்தி யுள்ளனர். அதில் வெள்ளிக்கிழமை (ஜூன் 12) மாலை 6 மணிக்குள் சுகன் யாவை ஒப்படைக்க வேண்டும், இல்லையென்றால் வேறுவிதமான பிரச்சினைகள் உருவாகும் என இளங்கோவனின் பெற்றோரை எச்சரித்துள்ளனர். ஆனால் எங்கு தேடியும் இருவரும் கிடைக்க வில்லை. சுகன்யாவின் சகோதரனான சாதி அமைப்பில் நிர்வாகியாக இருக்கும் பிரபாகரன், கிளியூரைச் சேர்ந்த சிலம்பு உள்ளிட்ட சுமார் 150க்கும் மேற்பட்டோர் கிளியூர் தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்த வெள்ளிக்கிழமை இரவு 8 மணிக்கு ஆயுதங்களுடன் சென்றுள்ளனர். அங்கு பாதுகாப்புக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காவல்துறையி னர் அவர்களைத் தடுக்க முற்படும் போது, அவர்கள் கற்களால் தாக்கிய தில் காவல் ஆய்வாளர் விஜி உள்ளிட்ட மூன்று காவல் துறையின ருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. பின்னர் காவல் துணை கண்கா ணிப்பாளர் விஜயகுமார் தலைமை யில் அதிரடிப்படை வரவழைக்கப் பட்டு குடியிருப்புகள் மீதான தாக்கு தல் முயற்சி தடுக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் சம்பவ இடத்தை நேரில் பார்வை யிட்டார். பின்னர் காவல்துறையினர் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் எனக்கூறி கிளியூர் பகுதியைச் சேர்ந்த 20 பேரையும், பூவனூர் பகுதியைச் சேர்ந்த 18 பேரையும் பிடித்து விசா ரணை நடத்தி வருகிறார்கள். இதுகுறித்து தகவலறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் டி.ஏழுமலை, செயற்குழு உறுப்பினர் எம்.ஆறு முகம், ஒன்றியச் செயலாளர் ஆர்.சீனிவாசன் மற்றும் ஏழுமலை உள்ளிட்ட குழுவினர் சனிக்கிழமை அன்று காலை (ஜூன் 13) சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். இதுகுறித்து மாவட்டச் செயலா ளர் டி.ஏழுமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட காதலர்கள் இருவரும் சட்டப்படி திருமண வயதை எட்டிய வர்கள் என்பதால் அவர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் காவல்துறையினர் தொடர்ந்து உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். காவல்துறையினரை தாக்கியதாக கூறி கைது செய்யப்பட்டுள்ள பலர் இதில் சம்பந்தப்படாதவர்கள் என விசாரணையில் தெரிய வந்துள்ளது. எனவே சம்பவத்தில் தொடர்பு இல்லாதவர்களை விடுவித்து, உண்மைக் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். மீண்டும் தலித் பகுதி மீது தாக்குதல் முயற்சி நடத்தப்படாமல் தடுக்கவும், இரு பகுதி சாதிய மோதல் ஏற்படாமல் இருக்கவும் உரிய பாதுகாப்பு மற்றும் சமாதான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.