tamilnadu

குறைகளை நீக்கி அனைவருக்கும் ரேசன் வழங்க கோரிக்கை

கள்ளக்குறிச்சி. ஆக, 18- கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவ தும் நியாயவிலை கடைகளில் உள்ள  பல்வேறு குறைபாடுகளை போக்கி முறையாக பொருட்களை வழங்கக் கோரி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் மனு அனுப் பப்பட்டுள்ளது. இது தொடர்பாக சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஏ.தேவி, செய லாளர் இ.அலமேலு ஆகியோர்  மாவட்ட ஆட்சியர் கிரண்குராலா விற்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி யுள்ள மனுவில் குறிப்பிட்டுள்ள தாவது; கள்ளக்குறிச்சி, சின்னசேலம், சங்கராபுரம், உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர் வட்டங்களுக்கு உட்பட்ட 46 நியாயவிலைக் கடை களில் மாதர் சங்கத்தின் குழுக்கள்  மூலம் நேரில் ஆய்வு மேற்கொண் டோம். இதில் நியாயவிலைக் கடை களில் பல்வேறு குறைபாடுகள் தொடர்ச்சியாக உள்ளது தெரிய வந்தது. இக் குறைபாடுகளை போக்  கும் வகையில் கீழ்க்கண்ட கோரிக்கை களை நிறைவேற்ற வேண்டும் என  மாதர் சங்கம் சார்பில் வலியுறுத்து கிறோம்.

கொரோனா பொதுமுடக்க காலம்  முழுவதும் ஒவ்வொரு குடும்பத் திற்கும் மாதம் தலா ஆயிரம் ரூபாய்  வழங்க வேண்டும், விலையில்லாமல் சமையல் எண்ணெய், பருப்பு, சர்க்  கரை போன்ற பொருட்களை தொடர்ந்து வழங்க வேண்டும், பல கடைகளுக்கு ஒரே ஊழியரை பணிபுரிய நிர்பந்திப்பதை தவிர்த்து ஒவ்வொரு கடைக்கும் தனி ஊழி யரை நியமித்து பொருட்கள் வழங்க  வேண்டும், விவசாயம் சார்ந்த மாவட்டம் என்பதால் விவசாய பணி களுக்கு சென்று வந்து பொருட்கள் வாங்கும் வகையில் மாலை 6 மணி  வரை தினசரி நியாயவிலைக் கடை கள் திறந்திருக்க வேண்டும், கொரோனா தொற்று தொடரும் நிலையில் தனிமனித இடைவெளி கடைபிடிப்பது தற்போது நடை முறையில் இல்லை. இதனை தொடர  நடவடிக்கை மேற்கொள்ள வேண் டும், நியாயவிலைக் கடைகள் திறக்கும் நாட்கள், எந்தப் பகுதி  மக்கள் எந்த தேதியில் பொருட்கள் வாங்க வரவேண்டும் என்பதை முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும், மக்களுக்கு தேவைப்  பட்ட பொருட்களை மட்டும் கொடுக்க  வேண்டும், பிற பொருட்களை வாங்கு மாறு நிர்பந்திக்க கூடாது, மேலும் சர்க்கரை நோய் உள்ள வர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரு வதால் அனைத்து குடும்ப அட்டைக் கும் கோதுமை வழங்க வேண்டும், அரிசி, மண்ணெண்ணெய் உள்ளிட்ட  பொருட்களின் அளவை குறையா மல் முழுமையாக வழங்க வேண்டும்,  ஒருமுறை பொருட்கள் போடும்போது  வேலை நிமித்தம் காரணமாக பொருட்  கள் வாங்கவில்லை என்றால் அவர் கள் பொருட்கள் வாங்கியதாக குறுஞ்செய்தி வருகிறது, எனவே இதிலுள்ள முறைகேடுகளை தடுக்க வேண்டும், பொருட்கள் வாங்காதவர்க ளுக்கு அவர்கள் கேட்கும்போது வழங்க வேண்டும், இருப்பு விபரம்  வெளிப்படையாக தகவல் பலகை யில் எழுதப்பட வேண்டும், கடை களுக்கான அட்டைகளின் எண்ணிக் கைக்கு ஏற்ப சரியான அளவில் தர மான பொருட்களை எடை குறையா மல் ஒதுக்க வேண்டும் என்பன  உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை மாவட்ட ஆட்சியர் தலையிட்டு நிறைவேற்ற வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.