கள்ளக்குறிச்சி, ஜூலை 4- தமிழ்நாடு ஊர்காவல் படையில் தற்போது பணி யாற்றி வரும் 15,622 பேரும் தங்களை நிரந்தரப்படுத்த வேண்டும் என தமிழக அர சுக்கு கோரிக்கை விடுத் துள்ளனர். இதுகுறித்து ஊர்க்காவல் படையில் பணியாற்றும் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த சரவணன் என்பவர் கூறுகை யில், “இரவு பகல் பார்க்கா மல் காவல் துறையோடு இணைந்து ஊர்காவல் படை வீரர்கள் சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள். திருவிழாக்கள், போராட்டங்கள், வன்முறை கள், மற்றும் எதிர்பாராத வகையில் ஏற்படும் நெருக் கடியான சூழல்களில் சட்டம், ஒழுங்கை பாது காப்பதில் தமிழக காவல் துறையினருக்கு பேருதவி யாக இருக்கிறோம். ஏற்கனவே நாள் ஒன்றுக்கு 65 ரூபாய் ஊதியம் என இருந்ததை 2012ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நாள் ஒன்றுக்கு 150 ரூபாய் என உயர்த்தி மாதம் 30 நாட்கள் பணி வழங்கினால் மாதம் ஒன்றுக்கு 4,500 ரூபாய் கிடைத்தது. பின்னர் உச்ச நீதிமன்ற ஆணையின்படி நாள் ஒன்றுக்கு 560 ரூபாய் என ஊதியத்தை உயர்த்திய தமிழக அரசு மாதம் முழுவ தும் வேலை வழங்காமல், மாதத்தில் 5 நாள் மட்டுமே வேலை என அறிவித்ததால் மாதம் 2,800 ரூபாய் மட்டுமே கிடைக்கிறது. இந்த சொற்ப ஊதியத்தையும் பொருட்ப டுத்தாமல் கொரோனா பாது காப்பு பணியில் ஈடுபடும் போது வைரஸ் தொற்றோ, அல்லது விபத்தோ ஏற் பட்டால் எங்களின் குடும்பம் வீதியில் நிற்கும் நிலமைக்கு தள்ளப்படும். எனவே உச்சநீதிமன்ற உத்தரவுப்படி டெல்லி, பிகார், மத்தியபிரதேசம், ஆந்திரா போன்ற மாநிலங்க ளில் பணி நாட்களை உயர்த்தி நிரந்தரம் செய்து மாத ஊதி யம் 22,000 முதல் 30,000 ரூபாய் வழங்குவது போல் தமிழ்நாட்டில் உள்ள ஊர்காவல் படை வீரர்களின் தியாகத்தை ஆதரிக்கும் வகையில் பணி நாட்களை உயர்த்தி, மாதம் முழுவதும் வேலை வழங்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் ஊதி யத்தை அந்த மாத இறுதி யில் வழங்க வேண்டும் என் றும் அவர் கோரிக்கை விடுத்தார்.