ஊரடங்கு காலத்தில் பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு மையத்திலேயே சமைத்த உணவு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், சமையல் உதவியாளர்களுக்கு ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவ லகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் கே.மகாலிங் கம், சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் வடிவேலு ஆகியோர் பேசினர்.