கல்வராயன்மலை, ஜூன் 18- நீதிமன்ற தீர்ப்பை மீறி மலைவாழ் மக்களுக்கு சொந்தமான நிலங்களில் இருந்து வேளாண் விளை பொருட்களை திருடுபவர்கள் மீதும், அவர்களுக்கு ஆதர வாக செயல்படும் காவலர் கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி வெள்ளி மலை அருகேயுள்ள கரியா லூர் காவல்நிலையத்தை மலை மக்கள் முற்றுகையிட்டனர். கள்ளக்குறிச்சி மாவட் டம் கல்வராயன்மலை வாழப்பூண்டி கிராமத்தில் மலைவாழ் மக்களுக்கு சொந்தமான விளை நிலங் களை சேலத்தைச் சேர்ந்த வினோத்கந்தையா என்பவர் அபகரித்து பயன்படுத்தி வந்தார். அந்த நிலங்கள் அங்கு வசிக்கும் மக்களுக்கே சொந்தம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. நீதிமன்ற மும் அந்த நிலம் மலைவாழ் மக்களுக்கே சொந்தம் என தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில், அங்கு விளைந்திருந்த மாங்காய், பலா உள்ளிட்ட 3 லட்ச ரூபாய் மதிப்புள்ள விளை பொருட்களை வினோதன் கந்தையா அடியாட்கள் திருடி சென்றனர்.
இதுகுறித்து மலைவாழ் மக்கள் கரியாலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்த னர். இதையடுத்து அந்த வாக னத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் இரவில் அந்த வாகனத்தை விடுவித்தனர். காவல்துறையின் இத்த கைய நடவடிக்கையை கண் டித்தும், குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும், மலைவாழ் மக்க ளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரியும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் வியாழனன்று (ஜூன் 18) கரியாலூர் காவல் நிலையம் முற்றுகையிடப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த கச்சராபாளையம் காவல் நிலைய ஆய்வாளர் வள்ளி உரிய நடவடிக்கை எடுப்ப தாக உறுதி அளித்தார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் டி.ஏழுமலை, விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.வி.ஸ்டாலின் மணி, விவசாய தொழிலா ளர்கள் சங்க மாவட்டத் தலை வர் பி.சுப்பிரமணியன், வாலி பர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் வே.ஏழுமலை, தீண்டாமை ஒழிப்பு முன் னணி மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் வி.ராஜா, மலை வாழ் மக்கள் சங்கத்தின் மாநிலப் பொருளாளர் பொன்னுசாமி, துணைத் தலைவர்கள் கிருஷ்ண மூர்த்தி, அண்ணாமலை, கல் வராயன்மலை சங்க செயலா ளர் செல்வராசு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
வழக்குப் பதிவு
பேச்சுவார்த்தையின் நிறைவில், வினோத் கந் தையா மீது திருட்டு வழக்கு எண் 195/2020, பிரிவு 147, 294பி, 379, 506/2 (கொலை மிரட்டல் திருடுதல் ஆபாச மாகத் திட்டுதல்) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.