கள்ளக்குறிச்சி. டிச, 2- திருக்கோவிலூர் என்ஜிஓ நகரைச் சேர்ந்த நபர் நகைச் சீட்டு, தீபாவளி சீட்டு என நடத்தி ஏராளமான பொதுமக்களிடம் சுமார் 13 கோடி ரூபாய் அளவிற்கு மோசடி செய்துவிட்டு தலை மறைவாகி விட்டதாக புகார் எழுந்துள்ளது. தங்கள் பணத்தை மீட்டுத் தருமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பாதிக் கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவி லூரைச் சேர்ந்த முத்து என்பவரின் மகன் முரளிகிருஷ்ணன். இவர் ஏராளமானோருக்கு வட்டிக்கு பணம் கொடுத்து வாங்கும் தொழி லில் ஈடுபட்டு வந்ததால் வட்டிமுரளி என்று இவருக்கு பெயருண்டு. வட்டித் தொழிலில் நல்ல லாபம் கிடைத்ததால் ராகவேந்திரா ஜூவல்லர்ஸ் என திருக்கோவிலூரில் நகைக் கடை திறந்தார். பின்னர் நகைச் சீட்டு நடத்து வது, தீபாவளிச் சீட்டு நடத்துவது என தொழில் விரிவானதன் அடிப்படையில் பலரை முகவர்களாக நியமித்து தீபாவளி சீட்டிற்கு பணம் வசூலித்து தரும் பணியில் ஈடுபடுத்தி னார். இதன் மூலம் பல கோடி ரூபாய் இவரிடம் குவிந்ததாகக் கூறப்படுகிறது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு நகை மற்றும் பொருட்கள் தர வேண்டிய சூழ லில் பணம் கட்டியவர்கள் அதனை கேட்ட தற்கு “நகை விலை மிக அதிகமாக இருக்கி றது, சற்று பொறுங்கள்”என க்கூறியுள்ளார். ஆனால் திடீரென நான்கு தினங்களுக்கு முன்பு நகைக் கடையில் இருந்த நகைகள் அனைத்தையும் மூட்டை கட்டி எடுத்துக் கொண்டு குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டார். இந்நிலையில் பணம் கட்டிய முகவர்களி டம் பணத்தை கேட்ட பொதுமக்களின் நிர்பந்தத்தால் முகவர்கள் பலர் ஒன்றுகூடி டிசம்பர் இரண்டாம் தேதி திங்கள் தின குறை கேட்பு கூட்டத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடமும் மேற்படி முரளியை கண்டுபிடித்து கட்டிய பணத்தை மீட்டுத் தர சொல்லி மனு அளித்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள நிலையில் முதன் முறையாக டிசம்பர் 2 ஆம் தேதி குறை கேட்புக் கூட்டம் நடைபெறும் எனவும் பொது மக்கள் தங்கள் குறைகளை மனு அளித்து பயன்பெறலாம் என ஆட்சியர் அலுவலகம் அறிவித்திருந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதன் எதி ரொலியாக திங்கட்கிழமையன்று மனு அளிக்க வந்த அனைவரும் மனுக்களை அங்கு வைக்கப்பட்டு இருந்த பெட்டியில் போட்டு விட்டுச் சென்றனர்.