கள்ளக்குறிச்சி, மார்ச் 4- நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான வார்டுகள் மறுவரை தமிழ்நாடு மறுவரையரை ஆணைய கருத்துக் கேட்புக் கூட்டம் வியாழனன்று (மார்ச்5) கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. தமிழ்நாடு மறுவரையரை ஆணையச் சட்டம் 2017 மற்றும் தமிழ்நாடு மறுவரையரை ஆணைய ஒழுங்குமுறை விதிகள் 2017-ன்படி 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பினை அடிப்படையாகக் கொண்டு தயார் செய் யப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சார்ந்த 1 நகராட்சியின் வார்டுகள் 7, பேரூ ராட்சிகளின் வார்டுகள் 9, ஊராட்சி ஒன்றி யங்களில் அடங்கிய கிராம ஊராட்சிகளின் வார்டுகள், ஊராட்சி ஒன்றியங்களின் வார்டு கள், மற்றும் மாவட்ட ஊராட்சி வார்டு மறுவரை யறை வரைவு குறித்தான கோரிக்கைகள் பிப்ரவரி 18 முதல் 22 ஆம் தேதி வரை மனுக்க ளாக பெறப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட ஆட்சியரால் பிப்ரவரி 25 ஆம் தேதி அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்களின் கருத்து கேட்பு கூட்டம் நடத்தி மனுக்கள் பெறப்பட்டது. கோரிக்கைகளின் மீது விவாதித்து முடிவு செய்ய பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கருத்து கேட்பு கூட்டம் தமிழ்நாடு மறுவரையறை ஆணை யத்தால் மார்ச் 5ஆம் தேதி வியாழன் அன்று காலை 11 மணியளவில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியராக கூட்ட அரங்கில் நடை பெற உள்ளது. இதன் மீது கருத்துக்கள் தெரி விக்க விரும்பும் பொதுமக்கள் மற்றும் அரசி யல் கட்சிகளின் பிரதிநிதிகள் தங்களுடைய கருத்துக்களை நேரில் ஆஜராகி தெரிவிக்க லாம் என மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.