tamilnadu

img

இந்தியன் வங்கி நிர்வாகம் அடாவடி: சிபிஎம் போராட்டம்

உளுந்தூர்பேட்டை, ஆக. 20- தகுதியுள்ள விவசாயிகள், படித்த  இளைஞர்களுக்கு கடன் வழங்காமல் அவ தூறாக பேசி அவமானப்படுத்தியும், கொரோனா காலத்தில்கூட பால் ஊற்றிய தற்கு பணம், நூறு நாள் வேலைத்திட்ட பணம்  உள்ளிட்ட சிறு தொகைகளைக் கூட வாடிக்கையாளர்களுக்கு வழங்காமல் அனைத்தையும் கடனில் வரவு வைக்கும் சேந்தநாடு இந்தியன் வங்கி நிர்வாகத்தின் அடாவடி செயலைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வங்கி முன்பு வியாழனன்று (ஆக 20) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வங்கி மூலம் பெறவேண்டிய பல்வேறு நிவாரணத் தொகைகள், திருமண உதவித்தொகை உள்ளிட்டவற்றை கல்விக் கடன் உள்ளிட்ட கடன்களில் வரவு வைக்கப் படுகிறது. வாடிக்கையாளர்கள் தங்களது சேமிப்பு பணத்தை அவசர தேவைகளுக்குக் கூட எடுக்க அனுமதிப்பதில்லை. தாட்கோ, டிக் நிறுவனங்கள் மூலம் கடன்  விண்ணப்பித்து மானியம் பெற்று மானி யத்தொகை வந்தபின் கடன் தர மறுக்கி றார்கள்.

பின்தங்கிய கிராமப்புற பகுதியான இங்கு  விவசாயம், கால்நடை வளர்ப்பு, முந்திரி  கொட்டை உடைக்கும் தொழில் போன்ற வற்றுக்கு கூட கடன் தருவதற்கு வங்கி நிர்வா கம் மறுத்து வருகிறது. இத்தகைய அடாவடித்தனத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் ஒன்றியச் செயலாளர் ஜெ.ஜெயக் குமார் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்  டத்தில் மாநிலக்குழு உறுப்பினர் ஜி. ஆனந்தன், மாவட்டச் செயலாளர் டி.ஏழு மலை, செயற்குழு உறுப்பினர்கள் டி.எம்.ஜெய்சங்கர், டி.எஸ்.மோகன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் டி.வெங்கடேசன், எம்.கே.பழனி மற்றும் இடைக்குழு உறுப்பி னர்கள் கிளைச் செயலாளர்கள் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர். முன்னதாக சேந்தநாடு கடைவீதியில் இருந்து ஊர்வலமாக சென்றனர். பின்னர் காவல்துறையினரின் தலையீட்டின் பேரில் வங்கியின் மேலாளர் அஜய்தயாளன் ஆர்ப்பாட்டம் நடந்த இடத்திற்கு வந்து “பத்து  தினங்களில் குறைபாடுகளை போக்க நடவ டிக்கை எடுக்கப்படும்” என உறுதி அளித்தார்.  அதன் பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.