tamilnadu

img

தொடர்ந்து பணி மறுக்கப்பட்டதால் பணிமனையிலேயே ஓட்டுநர் மயக்கம்

உளுந்தூர்பேட்டை. பிப், 16- அரசுப் போக்குவரத்துக் கழக உளுந்தூர்பேட்டை பணிமனையில் தொடர்ந்து பணி வழங்க மறுக்கப்பட்ட தால் ஏற்பட்ட மன அழுத்தத் தின் காரணமாக பணிமனை யிலேயே ஓட்டுநர் ஒருவர் மயக்கம் அடைந்து கீழே விழுந்தார்.  உளுந்தூர்பேட்டை வட்டம் கோட்டையாம் பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் கே.முருகன். இவர் உளுந்தூர்பேட்டை அரசு போக்குவரத்து பணி மனையில் ஓட்டுநராக பணி புரிந்து வருகிறார். இவர் சிஐடியூ தொழிற்சங்கத்தை சேர்ந்த நிர்வாகியாகவும் உள்ளார். இதனால் பணி மனையில் கட்டுப்பாட்டு பிரிவை கவனித்து வரும் அதிமுக தொழிற்சங்க நிர்வாகியும், மற்றொரு ஓட்டுநர் இருவரும் சேர்ந்து முருகனுக்கு தொடர்ந்து பணி வழங்காமல் அலைக் கழித்து வந்துள்ளனர்.  கடந்த 4ஆம் தேதிகூட விருத்தாசலத்திற்கு கல்லூரி மாணவர்களை ஏற்றிச் செல்லும் அரசு நகரப் பேருந்து எண் 16 இயக்கப்  படாததால் உளுந்தூர் பேட்டை பேருந்து நிலை யத்தின் முன் மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட னர். அப்போது ஓட்டுநர், நடத்துனர் இல்லாததால் பேருந்து இயக்கப்பட வில்லை என போராட்டம் நடத்தியவர்களிடமும், காவல்துறையிடமும் பணி மனை நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து தினசரி முருகனை பணிமனைக்கு வர வழைத்து பேருந்து இல்லை, நடத்துனர் இல்லை என சாக்குபோக்கு சொல்லி பணி தராமல் அலைக் கழித்துள்ளனர்.  கடந்த13-ஆம் தேதி நகரப் பேருந்து தடம் எண் 16 பேருந்தில் பணி செய்யச் சொல்லி டூட்டி சார்ட்டில் கையெழுத்து வாங்கியுள்ள னர். பின்னர் பணி வழங்க வில்லை. அதேபோல 15ஆம் தேதி சனிக்கிழமையன்று நகரப் பேருந்து தடம் எண் 35இல் பணி என்று கூறி டூட்டி சார்ட்டில் கையெழுத்து வாங்கி பின்னர் டூட்டி இல்லை என்று திருப்பி அனுப்பியுள்ளனர். மீண்டும் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 16) பணிமனைக்கு வந்த முருகனிடம் தடம் எண் 122 ஆர்.டி பேருந்தில் பணி செய்ய வேண்டும் எனக்கூறி டூட்டி சார்ட்டில் கையெழுத்து பெற்றுக் கொண்டு பின்னர் "நடத்துனர் வரும்வரை ஓய்வறையில் காத்திரு" என ஓட்டுநர் பணியில் இருந்து கொண்டு கட்டுக்காப்பாளர் பணியை பார்க்கும் ஓட்டுநர் ஒருவரும், ஆளும் கட்சியைச் சேர்ந்த ஒருவரும் கூறியுள்ள னர். கடந்த 10 நாட்களுக்கு மேல் டூட்டி இல்லாமல் தினசரி தன்னை வர வழைத்து திருப்பி அனுப்பிய தால் மிகுந்த மன அழுத்தத் தில் இருந்த ஓட்டுனர் முருகன் இன்றும் நமக்கு சாக்குப்போக்கு சொல்லி அனுப்பி விடுவார்களோ என்ற சிந்தனையோடு டூட்டி சார்ட்டில் கையொப்பமிட்டு விட்டு ஓய்வு அறைக்கு சென்றபோது நடுவிலேயே மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அங்கிருந்த சக தொழிலாளர்கள் அவரை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த னர்.  தனக்கு தொடர்ந்து பணி மறுக்கப்பட்டு தினசரி திருப்பி அனுப்பப்பட்டதால் ஏற்பட்ட மன அழுத்தமே உடல்நிலை பாதிக்க காரணம் என ஓட்டுனர் முருகனும், அவருடைய மனைவி வாசுகியும் கூறிய நிலையில்;  ஆளும் கட்சி நிர்வாகிகள் மற்றும் பணிமனை கிளை மேலாளர் ஆகியோர் முரு கனுக்கு கிட்னி பிரச்சனை காரணமாக அவர் மயக்க மடைந்ததாக கூறி பிரச்ச னையிலிருந்து தப்பிக்க முயலுவதாக தெரிகிறது. சிஐடியு பணிமனை தலை வரான சுப்பிரமணி, செய லாளர் கே.திருமுருகன் கூறுகையில், தொடர்ந்து பணிமனையில் ஆளும் கட்சி நிர்வாகிகளின் தலை யீடு காரணமாக தொழி லாளர்கள் கசக்கிப் பிழியப்படுகிறார்கள் என வும், இதுவரை 3 தொழி லாளர்கள் மயங்கி விழுந்துள் ளனர். இச்சம்பவம் தொடர் பாக உயர் அதிகாரிகள் பணி மனைக்கு வருகை தந்து உரிய விசாரணை நடத்தி தவறிழைத்தவர்கள் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.