tamilnadu

img

நாய்கள் தொல்லையால் கள்ளக்குறிச்சி மக்கள் அச்சம்

கள்ளக்குறிச்சி. அக். 21-  கள்ளக்குறிச்சி நகரில் உள்ள 21 வார்டுகளி லும் தெரு நாய்களின் தொல்லை மிக அதிக ரித்துள்ளதால் அப்பாவி பொதுமக்கள் பலர்  நாய்க்கடி அபாயத்துக்கு உள்ளாகும் சூழல்  நிலவுகிறது. தமிழகத்தில் புதிய மாவட்டமாக உரு வெடுக்க உள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்தின்  தலைநகராக கள்ளக்குறிச்சி நகரம் அமைய  உள்ளது. கள்ளக்குறிச்சி நகரில் உள்ள 21  வார்டுகளிலும் தெருநாய்களின் எண்ணிக்கை  மிகக் கூடுதலாகியுள்ளது. இதனால் தெருக்க ளில் வசிக்கின்ற பொதுமக்கள், குறிப்பாக பெண்களும், குழந்தைகளும் பீதியில் உள்ளனர். கடந்த சில வருடங்களாகவே நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் நாய்கள் அதிக எண்ணிக்கையில் பெருகி உள்ளன. முன்பு அவ்வப்போது நிர்வாகத்தின் சார்பில் நாய்களை பிடித்து செல்லும் வழக்கம் இருந்தது. சமீபகாலமாக இந்த பணி நடை பெறவில்லை. இதனால் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து அவை தெருக்க ளில் போவோர், வருவோரை எல்லாம் அச்சு றுத்தும் வகையில் குரைத்து துரத்துகின்றன.  இது மட்டுமல்லாமல் இருசக்கர வாக னங்களில் செல்வோரை மிகுந்த வேகத்து டன் குறைத்துக்கொண்டே துரத்துவ தால் வாகன ஓட்டிகளும் அச்சுறுத்தலுக்கு உள்ளா கின்றனர். இது தவிர தெருநாய்களின் திடீர் குறுக்கீடுகளால் வாகன விபத்துகளும் நடைபெறுகின்றன. காயமுற்று உயிரிழப்பு வரைகூட இவை செல்கிறது.எனவே கள்ளக்  குறிச்சி நகராட்சி நிர்வாகம் உடனடியாக தெரு நாய்களையும், வெறி பிடித்துள்ள நாய் களையும் உடனடியாக உரியமுறையில் பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என  கள்ளக்குறிச்சி நகரில் வசிக்கும் பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். உளுந்தூர்பேட்டை இதேபோல் உளுந்தூர்பேட்டை பேரூ ராட்சியில் உள்ள 18 வார்டுகளிலும் நாய்  தொல்லை கூடுதலாக உள்ளது. இத்துடன் குரங்கு மற்றும் மாடுகளின் பிரச்சினையால் பேரூராட்சியில் வசிக்கும் பொதுமக்கள் தினசரி மிகப் பெரும் அவதியடைந்து வரு கின்றனர்.  திடீர் திடீரென்று வீடு மற்றும் கடை களுக்குள் புகுந்து பொருட்களை தூக்கிக் கொண்டு ஓடும் குரங்குகளால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் எந்த நேரமும் பீதி யிலேயே உள்ளனர். உளுந்தூர்பேட்டைக்கு அருகிலேயே வனத்துறையினரின் பராமரிப்பில் உள்ள  காப்புக் காடுகள் ஏராளமாக உள்ளன.  இக்குரங்குகளை பிடித்து இந்த காப்புக்காடு களில் விட வேண்டுமெனவும்; அதேபோல சாலைகளில் கட்டுப்பாடில்லாமல் சுற்றித்திரி யும் மாடுகளை பிடித்து அதன் உரிமையாளர்க ளுக்கு மாடுகளை பராமரிக்க அறிவுறுத்த வேண்டும் என உளுந்தூர்பேட்டை நகர மக்கள்  கோரிக்கை விடுக்கின்றனர்.