கள்ளக்குறிச்சி, ஜூன் 13- திருச்சி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணியின்போது மரணமடைந்த வருவாய் ஆய்வாளர் சேகர் குடும்பத்திற்கு தமிழக அர சின் அறிவித்துள்ளபடி 50 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவல கம் முன்பு வெள்ளியன்று (ஜூன் 12) பெருந் திரள் முறையீடு இயக்கம் நடைபெற்றது. மேலும் தமிழகத்தில் 150க்கும் மேற்பட்ட துணை ஆட்சியர் நிலையிலான வருவாய் கோட்ட அலுவலர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் உள்ளிட்ட முக்கிய பணி யிடங்கள் காலியாக உள்ளதால் தற்போதைய கொரோனா நோய்த்தடுப்பு பணிகள் பாதிக்கிப்படுகின்றன. எனவே அந்த காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் முதுநிலை வருவாய் ஆய்வாளர் நிலையில் உள்ள ஒருங்கிணைந்த பணி முதுநிலைக்கு நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் காலதாமத மின்றி அரசாணை வெளியிட வேண்டும் என் பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன. மாவட்டத் தலைவர் ஆர்.தசரதன் தலை மையில் நடைபெற்ற இயக்கத்தில் செயலா ளர் எல்.ஆனந்தகிருஷ்ணன், பொருளாளர் ஆர்.தவமணி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத் தின் மாவட்டச் செயலாளர் கே.மகாலிங்கம், பொருளாளர் பி.ரவி, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கொளஞ்சியப்பன் உள்ளிட்டோர் கோரிக்கை களை விளக்கிப் பேசினர். இறுதியில் மாவட்ட ஆட்சியர் கிரண் குராலாவிடம் நிர்வாகிகள் மனு அளித்தனர்.