tamilnadu

img

சாதி மறுப்பு திருமண தம்பதி நீதிமன்றத்தில் ஆஜர்

உளுந்தூர்பேட்டை, ஜூன் 21- சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட தம்பதியினர் உளுந்தூர்பேட்டை  நீதிமன்றத்தில் ஆஜர்பட்டுத்தப்பட்டு கிளியூர் கிராமத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். உளுந்தூர்பேட்டை அருகே திருநாவலுர் ஒன்றியம் பூவனூரில் வசிக்கும் சுகன்யா வும், கிளியூர் கிராமத்தில் வசிக்கும் இளங்கோ வனும் கடந்த 6 ஆண்டுகளுக்கு மேல் காத லித்து வந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாற்று சமூகத்தைச் சேர்ந்த சுகன்யாவின் பெற்றோர் அவருக்கு திருமணம் செய்ய ஏற்பாடு செய்தனர். இதையடுத்து காதலர்கள்  இருவரும் சில தினங்களுக்கு முன்பு திரு மணம் செய்து கொள்வதற்காக வீட்டை விட்டு  வெளியேறினர். இதனால் ஆத்திரமடைந்த சாதி ஆதிக்க  நபர்கள் சிலர் கிளியூர் தலித் பகுதி குடி யிருப்புக்குள் தாக்குதல் நடத்த ஆயுதங்களு டன் சென்றனர். இதனை தடுத்த காவல் துறை யினர் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதில் காவல் ஆய்வாளர் விஜி, உதவி ஆய்வாளர்  உள்ளிட்ட 6 காவல்துறையினர் காயமடைந்தனர்.

தாக்குதல் நடத்திய நபர்கள்மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து சிலரை கைது செய்தனர். இந்நிலையில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட காதலர்கள் இருவரும் சனிக்கிழமையன்று (ஜுன் 20) விழுப்புரம் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவல கத்திற்கு நேரில் வந்து தங்களுக்கு பாதுகாப்பு  கோரியுள்ளனர். பின்னர் விழுப்புரம் மகளிர் காவல் நிலை யத்திற்கு அவர்கள் அனுப்பப்பட்டு அங்கி ருந்து திருநாவலூர் ஆய்வாளர் விஜியிடம் ஒப்படைக்கப்பட்டனர்.  உளுந்தூர்பேட்டை காவல் துணை கண் காணிப்பாளர் விஜயகுமார் உள்ளிட்டோர் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் எண் 2-ல் நீதிபதி ரோஸ்கலா முன்னிலையில் இருவரையும் ஆஜர்படுத்தினர். சுகன்யா கணவர் இளங்கோ வனுடன் செல்ல விரும்புவதாக நீதிபதியிடம் தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் காவல்துறை பாதுகாப்புடன் கிளியூர் கிராமத்திற்கு அழைத்  துச் செல்லப்பட்டனர். மேலும் இளங்கோவன் வீட்டிற்கு காவல்துறை பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.