tamilnadu

img

வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு ஒன்றிய அலுவலகம் முற்றுகை

உளுந்தூர்பேட்டை. ஆக. 4- கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாம்பட்டு ஊராட்சியில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் மோசடி நடைபெற்றுள்ளதாகவும்,  ஊராட்சி செயலாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் திருநாவலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை கிராம மக்கள் முற்று கையிட்டு போராட்டம் நடத்தினர். திருநாவலூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த வாணாம்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட  வாணாம்பட்டு, மட்டிகை, கல்லமேடு ஆகிய  கிராமங்களில்  வசிக்கும் ஏழை, எளிய மக்க ளுக்கு பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதில் பல பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணைகள் வழங்கப்படவில்லை. ஆனால் கடந்த 3 நிதியாண்டு காலத்தில் பல பயனா ளிகளின் பெயர்களில் வீடுகள் கட்டப்பட்ட தாகக் கூறி ஆவணங்கள் தயார் செய்து  அதற்கான தொகை  கையாடல் செய்யப் பட்டுள்ளது.

மேலும் இறந்தவர்களின் பெயரில் கூட வீடு கட்டப்பட்டதாக ஆவணங்கள் தயார் செய்து பணம் எடுக்கப்பட்டுள்ளது. பலர்  வீடு  கட்டாத நிலையில் வேறு சிலரது வீட்டின் புகைப்படங்களை இணைத்தும் பணம் கையா டல் செய்யப்பட்டுள்ளது.  மேலும் தனக்கு உடன்படாத நபர்களுக்கு வீட்டு வரி ரசீது உள்ளிட்ட எதையும் வழங்காமல் ஊராட்சி செயலாளர் முருகன் அலைகழிப்பதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. இதுதொடர்பாக ஊராட்சி ஒன்றிய அலு வலர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மனு அனுப்பியும் எந்த நடவடிக்கையும் இல்லாத தால் வாணாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மக்கள் திருநாவலூர் ஊராட்சி ஒன்றிய அலு வலகத்தை முற்றுகையிட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த   காவல் ஆய்வாளர் விஜி கிராம மக்களுடன் பேசினார். இதுதொடர்பாக உரிய நடவ டிக்கை எடுப்பதாக திருநாவலூர் ஒன்றிய ஆணையர் செந்தில்முருகன் உறுதி அளித்தார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.