tamilnadu

img

எந்த பொத்தானை அழுத்தினாலும் தாமரைக்கே ஓட்டு விழும்!

சண்டிகர்:
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் எந்த பொத்தானை அழுத்தினாலும், பாஜக-வுக்கே அந்த வாக்குகள் பதிவாகும் என்று ஹரியானா பாஜக வேட்பாளர் பாக்சிஸ் சிங்  பேசிய வீடியோ, சமூகவலைத் தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா மாநிலத்தில் தற்போதைய எம்எல்ஏ-வாகவும், மீண்டும் பாஜக வேட்பாளராகவும் போட்டியிடுபவர் பாக்சிஸ் சிங். இவர் பேசும் வீடியோ ஒன்றுசமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.அந்த வீடியோவில், “நீங்கள் யாருக்குவாக்களித்தாலும் எங்களுக்கு தெரிந்துவிடும், எங்களுக்கு தெரியாது என்று நினைக்காதீர்கள். நாங்கள் உங்களிடம் பகிரங்கமாக காட்டிக்கொள்ள மாட்டோம். எனினும், எங்களுக்கு தேவையென்றால், எங்களுக்கு வாக்களிக்காதவர்கள்யார் என்று கண்டுபிடிப்போம். ஏனென்றால்,மோடிஜி மிகுந்த புத்திசாலி யானவர். முதல்வர் மனோகர் லால் கட்டாரும் புத்திசாலி” என்று பாக்சிஸ் சிங் பேசியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இதுதொடர்பாக பாக்சிஸ் சிங்கிற்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்  அனுப்பியுள்ளது.பாக்சிஸ் சிங் பேசும் வீடியோவை தனதுடுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “உண்மையை பகிரங்கமாக ஒப்புக்கொண்டதன் மூலம், பாக்சிஸ் சிங்-தான் பாஜக-விலேயே மிகுந்த நேர்மையான தலைவர்” என்று கிண்டலடித்துள்ளார்.ஆனால், சமூகவலைத்தளங்களில் உலாவரும் வீடியோ போலியானது என்று பாஜக மறுப்பு வெளியிட்டுள்ளது.

;