tamilnadu

img

கர்நாடகாவில் தூக்கில் தொங்கியபடி கண்டுபிடிக்கப்பட்ட கல்லூரி மாணவியின் உடல்

கர்நாடகாவில் பொறியியல் படிக்கும் கல்லூரி மாணவியின் உடல் பாதி கருகிய நிலையில் தூக்கில் தொங்கியபடி கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கர்நாடகா மாநிலத்தின் ராய்ச்சூரில் உள்ள கல்லூரியில் பொறியியல் படிப்பு படிக்கும் மாணவி கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு காணாமல் போயுள்ளார். இந்நிலையில் மாணவியின் உடல் கல்லூரியிலிருந்து சுமார் 5-6 கிலோமீட்டர் தொலைவில் உள்ள காடு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மாணவியின் உடல் பாதி கருகிய நிலையில் மரம் ஒன்றில் தூக்கிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மாணவியின் குடும்பத்தார் அளித்த புகாரின் பேரில் ஒருவரை கைது செய்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


நூற்றுக்கணக்கான மக்கள் மாணவியின் இறப்புக்கு நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், கல்லூரி மாணவர்கள் பலர் மாணவிக்கு நீதி கேட்டு மெழுகுவர்த்தி ஏற்றி நினைவேந்தலை நடத்தியுள்ளனர். மேலும், சமூக வலைத்தளங்களில் மாணவிக்கு நீதி கேட்கும் பதிவு வைராலாகியுள்ளது.


;