சண்டிகர்:
ஹரியானாவைப் பொறுத்தவரை, தற்போதைய ஆளும் கட்சியான பாஜக-வும் சிரோமணி அகாலிதளமும் கூட்டணி கட்சிகளாகும். பஞ்சாப்பில் முக்கிய எதிர்க்கட்சியாக இருக்கும் அகாலிதளத்திற்கு, ஹரியானாவிலும் செல்வாக்கு உண்டு. இதனால், ஹரியானாவில் சிரோமணி அகாலி தளத்திற்கு குறிப்பிட்ட இடங்களை பாஜக ஒதுக்கீடு செய்வது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில், தற்போதும் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடந்து வந்தன.ஆனால், ஹரியானாவில் தற்போது அகாலிதளம் சார்பில் எம்எல்ஏ-வாக இருக்கும் பல்கவுர் சிங்கை, பாஜக வியாழனன்று தனது கட்சியில் இணைத்துக் கொண்டது, அகாலி தளத்திற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. “அகாலிதளம் எம்எல்ஏ-க்களை பாஜக வேட்டையாடி வருகிறது. இது கூட்டணி தர்மத்தை மீறிய செயல். இதனை ஏற்க முடியாது” என்று அகாலிதளம் தலைவர் சுக்பீர் சிங் பாதல் கண்டித்துள்ளார்.