பெங்களூரு, ஜூலை 8- கர்நாடகத்தில் காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணி அரசைக் காப்பாற்றும் முயற்சியாக, ஒட்டுமொத்த அமைச்சரவை யும் ராஜினாமா செய்துள்ளது. அதிருப்தி யில் ராஜினாமா கடிதம் அளித்துள்ள 13 எம்எல்ஏக்களையும், அமைச்சரவையில் இடம்கொடுத்து தக்க வைத்துக் கொள் வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 224 உறுப்பினர்களைக் கொண்ட கர்நாடக சட்டப்பேரவையில், பெரும்பான்மைக்கு 113 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. காங்கிரசுக்கு, சபாநாயகரையும் சேர்த்து 79 உறுப்பினர்களும், மதச்சார்பற்ற ஜனதா தளத்திற்கு 37 உறுப்பினர்களும் உள்ளனர். இந்த ஆளும் கூட்டணிக்கு 2 சுயேச்சைகள் மற்றும் ஒரு பகுஜன்சமாஜ் உறுப்பினர் ஆதரவும் இருந்தது. இந்நிலையில், காங்கிரஸ் மற்றும் மதச் சார்பற்ற ஜனதா தளத்தை சேர்ந்த 13 எம்எல்ஏக்கள் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளனர். இவை சபாநாயகரால் ஏற்கப்பட்டால் அவையின் பலம் 211 ஆகக் குறைந்துவிடுகிறது. அப்போது பெரும்பான்மைக்கு 106 உறுப்பினர்கள் தேவை. 13 எம்எல்ஏக்கள் ராஜினா மாவுக்குப் பிறகு காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணியின் பலம் 105 ஆக குறைந்து விடுவதால், பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் ஆட்சி கவிழ்ந்துவிடும். இந்த நெருக்கடியை மேலும் அதி கரிக்கும் வகையில், சுயேச்சை எம்எல்ஏக் களில் ஒருவரும் அமைச்சருமான நாகேஷ், அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றுள்ளார். பாஜக ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவிப்பதாக ஆளுநர் வஜு பாய்வாலாவிடம் கடிதம் அளித்துள்ளார்.
(விரிவான செய்தி : 3)
அரசுக்கு ஆதரவை வாபஸ்பெற்ற கையோடு, சுயேச்சை எம்எல்ஏ விமானத்தின் மூலம் மும்பைக்கு சென்றார். எடியூரப்பா வின் நேரடி உதவியாளர் அவரை தனி விமா னத்தில் அழைத்துச் செல்வது போன்ற புகைப் படம் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே ராஜினாமா கடிதம் கொடுத்த காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தள எம்எல்ஏக்கள் மும்பை ரிசார்ட்டில் தங்கவைக்கப்பட்டுள்ள நிலையில், சுயேச்சை எம்எல்ஏ நாகேசும் அங்கு தங்குகிறார். 105 உறுப்பினர்களை பெற்றுள்ள பாஜக, சுயேச்சை எம்எல்ஏவின் ஆதரவைப் பெற்று விட்டதால், 106 என்ற பெரும்பான்மைக்கு தேவையான பலத்துடன் உள்ளது. ஆனால் இந்த நிலை, 13 எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஏற்பாரா இல்லையா என்பதைப் பொறுத்தது. சபாநாயகரை தொடர்பு கொள்ள முடியவில்லை, அவர் எங்கிருக்கிறார் என தெரியவில்லை என்று கர்நாடக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, அமைச்சர் பதவிகளை அளிப்பதன் மூலம், ராஜினாமா கடிதம் அளித்துள்ள 13 எம்எல்ஏக்களை இழுக்க காங்கிரசும் மதச்சார்பற்ற ஜனதா தளமும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளன. அதிரு ப்தி எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பதவி அளிக்க வசதியாக, அமைச்சரவையில் இட ம்பெற்றுள்ள அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமா செய்துள்ளனர் என்ற தகவல் திங்களன்று மாலை வெளியாகியுள்ளது. காங்கிரஸ் சார்பில் இடம்பெற்றிருந்த 21 அமைச்சர்களும், மதச்சார்பற்ற ஜனதா தள அமைச்சர்களும் ராஜினாமா செய்துள்ள கர்நாடக முதலமைச்சர் அலுவலகம் உறுதிப் படுத்தியுள்ளது. கர்நாடக அமைச்சரவை முழுமையாக மாற்றியமைக்கப்படும் என் றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜினாமா செய்த 13 எம்எல்ஏக்களும் திரும்பி வந்தால் அவர் களுக்கு அமைச்சர் பதவி உறுதி என்பதை காட்டவே, அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமா செய்துள்ளனர். பிரச்சனை விரைவில் தீர்க்கப்படும் என்றும், அரசு சிக்கலின்றி தொடர்ந்து நீடிக்கும் என்றும் கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி கூறியுள்ளார். தற்போதைய அரசியல் சூழலால் தமக்கு எவ்வித பதற்ற மும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள் ளார். மதச்சார்பற்ற ஜனதா தள எம்எல்ஏக் கள் அனைவரும் குடகு மாவட்டத்தில் சோம் வார்பேட்டையில் உள்ள பேடிங்டன் ரிசார்ட்டுக்கு அழைத்துச் செல்லப்பட உள்ள தாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேசமயம், எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பாவும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்த ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பாஜக முன்னாள் அமைச்சர் ஷோபா, குமாரசாமி அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டதால் உடனடியாக பதவி விலகவேண்டும் என்றார்.