tamilnadu

உணவு, தண்ணீர் வழங்கவில்லை புலம்பெயர் தொழிலாளர்கள் போராட்டம்

பெங்களூரூ, மே 24 கர்நாடகாவிலிருந்து பீகார் செல்லும் ஷிராமிக் ரயிலில் பயணம் செய்த புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் வழங்கவில்லை எனக் கூறி உன்னாவ் ரயில் நிலையத்தில்  போராட்டம் நடத்தினர். வழித்தடங்களில் நீண்ட நேரம் ரயில்கள் நிறுத்தப்பட்டன. இதனால் எங்களுக்கு உரிய நேரத்திற்கு உணவு, தண்ணீர் கிடைக்கவில்லை என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறினர். இதே போல் விசாகப்பட்டினத்தில் இருந்து பீகார் சமஸ்திபூருக்கு செல்லும் ரயில் சாண்டாலியில் சிக்னலில் இரவு முழுவதும் நிறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இரண்டு நாட்களாக எங்களுக்கு உணவு கிடைக்கவில்லை” என்று ஒரு பயணி கூறினார். பீகார் முதல்வர் நிதீஷ் குமாருக்கு எதிராக பலர் முழக்கங்களை எழுப்பினர். ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், அதிகாலை 12.25 மணி முதல் அதிகாலை 05.20 மணி வரை ரயில் சிக்னலில் நிறுத்தப்பட்டது.  இதனால் கோபமடைந்த பயணிகள் 30 நிமிடங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மூன்று நான்கு தடங்களில் கூட கற்பாறைகளை வைத்தனர் என்றனர். தொடர்ந்து பயணிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி தொடர்ந்து ரயிலை இயக்கினோம் என்றார்.