கர்நாடகத்தில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சிகளின் ஆதரவாளர் வீடுகளில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்திவரும் நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, முதல்வர் குமாரசாமி, துணைமுதல்வர் பரமேஸ்வரா ஆகியோர், வருமான வரித்துறை அலுவலகத்தின் முன்பு போராட்டம் நடத்தினர். மோடியின் தூண்டுதல் காரணமாகவே அதிகாரிகள் சோதனை நடத்துவதாகவும் அவர் கள் குற்றம் சாட்டினர்.