tamilnadu

img

பாஜக எம்பி எம்எல்ஏக்கள் மீதான கிரிமினல் வழக்குகளை வாபஸ் பெறும் கர்நாடக அரசு

கர்நாடகாவில் பாஜக எம்.பி, எம்எல்ஏக்கள் மீதான கிரிமினல் வழக்குகளை  கர்நாடக அரசு வாபஸ் பெற்றுள்ளது. இச்சம்பவம் அம்மாநில எதிர்க்கட்சியினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. 
உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மையின் பரிந்துரையின் அடிப்படையில், சட்டம், சுற்றுலா மற்றும் வேளாண் அமைச்சர்கள் உட்பட பல அமைச்சர்கள் மீதான வழக்குகளும் கைவிடப்படும் எனக் கூறப்படுகிறது.
அதில், கர்நாடக அமைச்சர் ஜே.சி.மதுசாமி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் சி.டி.ரவி ஆகியோருக்கு எதிரான வழக்குகள் சட்டமன்ற ஒழுங்கு நடவடிக்கை, கலவரம் செய்ய முயற்சித்தது போன்ற குற்றச்சாட்டின் கீழ் பதிவு செய்யப்பட்டது. 
காங்கிரஸ் இருந்து பா.ஜ.கவிற்கு தாவிய ஆனந்த் சிங் மீதான வழக்கும் கைவிடப்பட்டுள்ளது. ஆனந்த் சிங் மீது ஹாஸ்பெட் தாலுகா அலுவலகத்தைத் தாக்கியதற்காக 2017 ஆம் ஆண்டில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும் குற்றவியல் மிரட்டல், அரசு ஊழியரைத் தாக்கியது, பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
கடந்த 2017ம் ஆண்டு ஹனுமான் ஜெயந்தி ஊர்வலத்தின் போது அனுமதி இன்றி சென்றதால் அவர்களை தடுத்தற்காக காவலர்கள் மீது தாக்குதலில் நடத்தியததாக மைசூரு எம்.பி. பிரதாப் சிம்ஹா வழக்கும் திரும்பப் பெறப்பட்டுள்ளது.
இதில், மாண்டியா சுயாதீன எம்.பி. சுமலதா அம்பரிஷ், யெல்பர்காவைச் சேர்ந்த பா.ஜ.க எம்.எல்.ஏ, ஹொன்னல்லியைச் சேர்ந்த பா.ஜ.க எம்.எல்.ஏ மற்றும் முதல்வரின் அரசியல் செயலாளர் எம்.பி. ரேணுகாச்சார்யா ஆகியோர் மீது வழக்குகள் கைவிடப்படுகின்றன.
பாஜக கர்நாடக மாநில டிஜி - ஐஜிபி மற்றும் அரசு வழக்கு மற்றும் சட்டத் துறை இயக்குநர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்  ஆனால் எடியூரப்பா அரசு அதை கருத்தில் கொள்ளலாமல் பாஜகவினரை தப்புவிக்கும் செயலில் ஈடுபட்டு வருகிறது. கொரோனா பேரிடருக்கிடையே கர்நாடக அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு  எதிர்க்கட்சியினர் மத்தியில் கடும் எதிர்ப்பு